#srilankannews

FEATUREDLatestNews

கொழும்பில் கொடூர சம்பவம் – சகோதரர்கள் இருவர் வெட்டிப் படுகொலை

கொழும்பில் (Colombo) சகோதரர்கள் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த கொலை சம்பவம் இன்று (15) காலை கொழும்பு, கிராண்ட்பாஸ் – களனிதிஸ்ஸகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. 23 மற்றும் 24 வயதுடைய சகோதரர்கள் இருவரே இவ்வாறு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர். இதேவேளை, மட்டக்களப்பில் (Batticaloa) நண்பர்களுக்கு இடையேயான மோதலில் ஒருவர் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (14) மட்டக்களப்பு வெல்லாவெளி காவல்துறை பிரிவிலுள்ள சின்னவத்தை Read More

Read More
FEATUREDLatestNews

கொழும்பு – கொட்டாஞ்சேனையில் சற்று முன் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி

கொழும்பு (Colombo) – கொட்டாஞ்சேனை (Kotahena) பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று சற்று முன்னர்  இடம்பெற்றுள்ளது. கொழும்பு (Colombo) – கொட்டாஞ்சேனை (Kotahena) பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. உயிரிழந்த நபரின் பெயர் சசிகுமார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி சறறுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிதாரி துப்பாக்கி சூட்டு சம்பவத்தை நிகழ்த்திவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுள்ளார்.  இதையடுத்து, கொழும்பு ஒருகொடவத்த பகுதியில் வைத்து அவர் கிரான்பாஸ் Read More

Read More
FEATUREDLatestNews

கனேமுல்லே சஞ்சீவ கொலை ; பிரதான சந்தேகநபர் கைது

கொழும்பு புதுக்கடை நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் 5ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்திற்குள் இன்று(19) முற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் கனேமுல்லே சஞ்சீவ என்றழைக்கப்படுகின்ற சஞ்சீவ குமார சமரரத்ன என்பவர் உயிரிழந்துள்ளார். இதன் பிரதான சந்தேகநபர் கொலை சம்பவம் இடம்பெற்று சில மணித்தியாலங்களுக்குள் கைது செய்யப்பட்டார். புத்தளம் – பாலாவி பகுதியில் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர், சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்தார். திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுகின்ற குழுவொன்றின் தலைவரான கனேமுல்லே சஞ்சீவ பூசா Read More

Read More
FEATUREDLatestNews

விபத்தில் சிக்கிய இளங்குமரன் எம்.பி : நேரில் சென்று பார்வையிட்ட பிரதமர் ஹரினி

நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் (Karunananthan Ilankumaran) விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார். சாவகச்சேரி – தனக்கிளப்பு பகுதியில் இன்றையதினம் (15) இந்த விபத்து சம்பவித்துள்ளது. வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வயலுக்குள் பாய்ந்து விபத்து சம்பவித்துள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர், அவரது உதவியாளர் மற்றும் வாகனத்தின் சாரதி காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர், யாழ்ப்பாணம் நோக்கி தனது வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த வேளையே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விபத்தில் சிக்கி Read More

Read More
FEATUREDLatestNews

கோப்பாய் காவல் நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றம் : வெடித்த சர்ச்சை

கோப்பாய் காவல் நிலைய பொறுப்பதிகாரியை இடமாற்றம் செய்ய வேண்டாம் என கோப்பாய் காவல் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் பெயரில் பதாகைகள் கட்டப்பட்டுள்ளன. கோப்பாய் காவல் நிலைய பொறுப்பதிகாரி வெதகெதர கடந்த மூன்றாண்டுகளுக்கு முதல் பொறுப்பதிகாரியாக பொறுப்பேற்றிருந்தார். தமிழ் மொழி பேச கூடியவராக இருந்தமையால் கோப்பாய் காவல் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வாழும் தமிழ் மக்கள் இவரை இலகுவில் அணுக கூடியவாறு இருந்தமையால், காவல் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் குற்றச்செயல்கள் பெருமளவில் கட்டுப்படுத்தப்படிருந்தன. இந்தநிலையில், பொறுப்பதிகாரிக்கு பதுளைக்கு Read More

Read More
FEATUREDLatestNews

மாணவர்களுக்கு விசேட கடன் திட்டம் : வெளியான மகிழ்ச்சி தகவல்

உயர்கல்விக்குத் தகுதிபெறும் மாணவர்களுக்கு விசேட கடன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வாய்ப்புகளை வழங்குவதற்கு, அரச சாரா பல்கலைக்கழகங்களுடன் இணைந்து விசேட திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகக் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் இன்று (11.02.2025) அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரச சாரா பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஆண்டுதோறும் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி சித்திபெறும் சகல மாணவர்களுக்கும் அரச பல்கலைக்கழகங்களின் கற்பதற்கான வாய்ப்பு கிடைப்பதில்லை. எனவே, உயர்கல்விக்கு Read More

Read More
FEATUREDLatestNews

நாளை(12) மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது – இலங்கை மின்சார சபை

நாளை(12) மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாதென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. நாளைய நாளுக்கான மின்சாரத்திற்கான கேள்வி தொடர்பில் பரிசீலித்ததன் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அதன் ஊடகப் பேச்சாளர் தம்மிக்க விமலரத்ன தெரிவித்தார். ஏற்கனவே திட்டமிட்டவாறு இன்று(11) பிற்பகல் 3.30 முதல் இரவு 10 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. நாட்டை 4 வலயங்களாக பிரித்து நேற்றும்(10) இன்றும்(11) மின்வெட்டை அமுல்படுத்தி மின்சாரத்திற்கான கேள்வியை முகாமைத்துவம் செய்ய தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார சபை நேற்று அறிவித்திருந்தது.  

Read More
FEATUREDLatestNews

இன்றும் மின்வெட்டு – நுரைச்சோலை நாளைமறுதினம் வழமைக்கு வரும்

நுரைச்சோலை மின்நிலையத்தின் மின்னுற்பத்தி நடவடிக்கைகள் வியாழக்கிழமை வழமைக்கு திரும்புமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நுரைச்சோலை மின்நிலையத்தின் மின்னுற்பத்தி ஆரம்பிக்கப்படும்பட்சத்தில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்பட வேண்டிய தேவை ஏற்படாதென மின்சார சபை ஊடகப்பேச்சாளர் தம்மிக்க விமலரத்ன தெரிவித்தார். நாளொன்றுக்கு 2400 மெகாவோட் மின்சார தேவை நாட்டில் நிலவுவதாக அவர் குறிப்பிட்டார். இந்நாட்களில் 2400 மெகாவோட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாகவும் ஊடகப்பேச்சாளர் தம்மிக்க விமலரத்ன கூறினார். இதேவேளை, இன்றைய தினமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாட்டை Read More

Read More
FEATUREDLatestNews

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளரை சந்தித்த பிரதமர்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியத்தை ​நேற்று(10) சந்தித்தார். பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இலங்கையின் வரிக் கொள்கை, வரி வருமானத்தை திறம்பட நிர்வகித்தல், பொதுத்துறையின் செயற்பாட்டை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட பொருளாதார காரணிகள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்தல், நிலையான வளர்ச்சியை நோக்காகக் கொண்ட கொள்கை ரீதியான காரணிகள் மற்றும் அரசாங்கத்தின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது Read More

Read More
FEATUREDLatestNews

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை : அரசின் அதிரடி நடவடிக்கை

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது குறித்து அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்துவதாக அறிவித்துள்ளது. அந்தவகையில் பொருட்களின் தொடர்ச்சியான விநியோகத்தை உறுதி செய்வதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது. வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) மற்றும் உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் இரண்டாவது முறையாகக் கூடி உணவுப் பாதுகாப்பை உறுதி Read More

Read More