#srilankannews

FEATUREDLatestNews

நாட்டில் ஆரம்பமாகவுள்ள புதிய விமான சேவை: வெளியான மகிழ்ச்சி தகவல்

இலங்கையின் முதல் தனியார் விமான நிறுவனத்தின் விமான சேவை எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் செயற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த விமான சேவை இலங்கையில் இருந்து மலேசியாவின் (Malaysia) கோலாலம்பூருக்கு ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஃபிட்ஸ்ஏர் (FitsAir) என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த விமான நிறுவனம், வணிக மற்றும் சுற்றுலா விமானங்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், பயணிகள் மலிவு விலையில் இந்த விமான சேவையைப் பெற முடியும் என்றும் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. Read More

Read More
FEATUREDLatestNews

மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு (Ministry of Education) முக்கிய அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கான 6000 ரூபா வவுச்சர் சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு இன்று (28.03.2025) அறிக்கை ஒன்றினை வெளியிட்டு குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளது. அதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான குறித்த வவுச்சர் சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் ஏப்ரல் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. முன்னதாக, அவற்றின் செல்லுபடியாகும் காலம் இம்மாதம் Read More

Read More
FEATUREDLatestNews

கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட பௌத்த பிக்கு…! அம்பலமாகும் அதிர்ச்சித் தகவல்கள்

அனுராதபுரம் – எப்பாவல (Eppawala) பகுதியில் விகாரை ஒன்றினுள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பிக்கு ஒருவர் கடந்த (25.03.2025) பிற்பகல் 2.30 மணியளவில் கொலை செய்யப்பட்டிருந்தார். கொலை செய்யப்பட்ட பிக்கு 69 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், துறவி கொலை செய்யப்பட்டமை தொடர்பாக மேலும் பல தகவல்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். காவல்துறை விசாரணைகளின் படி குறித்த தேரர் கடைசியாக 23 ஆம் திகதி இரவு 8.29 மணிக்கு ஒருவருக்கு தொலைபேசி அழைப்பு விடுத்ததாக தெரியவந்துள்ளது. மேலும் Read More

Read More
CINEMAFEATUREDLatest

இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார் – திரையுலகம் அதிர்ச்சி

இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆவார். கடந்த 1999 ஆம் ஆண்டு தாஜ் மஹால் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதை தொடர்ந்து சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், ஈர நிலம் போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்தார். கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான மார்கழி திங்கள் படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார். ஈஸ்வரன், மாநாடு மற்றும் விருமன் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படத்தில் Read More

Read More
FEATUREDLatestNews

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை குறித்து வெளியான தகவல்

இந்த ஆண்டு வாகன இறக்குமதியின் போது எவ்வித வரி திருத்தங்களும் செய்யப்படாது என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ (Duminda Hulangamuwa) தெரிவித்துள்ளார். அத்துடன், சந்தையில் வாகன விலைகளிலும் இந்த ஆண்டு எவ்வித மாற்றமும் ஏற்படாது என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார். ஊடகம் ஒன்றில் நேற்று (24) இரவு ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, துமிந்த ஹுலங்கமுவ இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “ வாகனங்களை இறக்குமதி செய்வதன் மூலம் Read More

Read More
FEATUREDLatestNews

யாழில் கோர விபத்து : இரண்டு பேர் படுகாயம்

யாழ்ப்பாணத்தில் (Jaffna) இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்து இன்றைய தினம் (24.03.2025) ) யாழ். – பொன்னாலைப் பாலத்தில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில், காரைநகர் மருதபுரத்தை சேர்ந்த தந்தையும் மகனுமே இவ்வாறு படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில், அங்கிருந்தவர்கள் விபத்தில் படுகாயமடைந்த தந்தையையும் , மகனையும் மீட்டு மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். விபத்து தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Read More
FEATUREDLatestNews

கல்வி அமைச்சு வெளியிட்ட அவசர அறிவிப்பு

சாதாரண தர பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் பெயர்களைத் தவறாகப் பயன்படுத்தி ஒரு போலி அறிவிப்பு தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த போலி அறிவிப்பில், இந்த ஆண்டு விஞ்ஞான பாட வினாத்தாளில் பாடத்திட்டத்தைத் தாண்டி, கேள்விகள் தாயரிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு தீர்வாக பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு கூடுதலாக 8 மதிப்பெண்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, “A” சித்திக்கான மதிப்பெண் 10 புள்ளிகளால் குறைக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி, 65 Read More

Read More
FEATUREDLatestNews

வாகன இறக்குமதியில் ஏற்பட்டுள்ள சிக்கல் : வெளியான தகவல்

உற்பத்தி திகதியின் அடிப்படையில் வாகனங்களை இறக்குமதி செய்யும் நடவடிக்கையினால் இலங்கைக்கு வாகன இறக்குமதி செயற்பாடுகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விடயத்தினை ஜப்பான் (Japan) – இலங்கை வணிக சம்மேளனத்தில் தலைவர் ஜகத் ராமநாயக்க (Jagath Ramanayake) தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”4 வருடங்களின் பின்னர் வாகன சந்தையை திறப்பது தொடர்பில் குழுவொன்றை அமைத்து ஆராயப்பட்டது. அந்த குழுவில் பதிவு செய்த திகதி என்பதற்கு மாறாக உற்பத்தி திகதியின் அடிப்படையில் வாகனங்களை Read More

Read More
FEATUREDLatestNews

லண்டன் விமானங்கள் ரத்து: சிறிலங்கா எயார்லைன்ஸ் விடுத்த அவசர அறிவிப்பு

தீ விபத்து ஒன்று காரணமாக பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதால் இன்று (21) கொழும்பில் இருந்து லண்டன் புறப்படவிருந்த இரு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சிறிலங்கா எயார்லைன்ஸின், லண்டனுக்கு இன்று (21) மதியம் 12:50 மணிக்கு புறப்படவிருந்த UL 503 விமானம் மற்றும் 20:40 மணிக்கு புறப்படவிருந்த UL 504 விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், பயணிகளின் சிரமத்திற்கு மன்னிப்பு கோரியுள்ள சிறிலங்கா எயார்லைன்ஸ், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக Read More

Read More
FEATUREDLatestNews

வரலாற்றில் முதல் முறையாக தங்க விலையில் ஏற்பட்ட மாற்றம்

வரலாற்றில் முதல் முறையாக நேற்றைய தினம் (14) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,000 டொலர்களை எட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) வரிகள் மற்றும் புவிசார் அரசியல் குறித்து முதலீட்டாளர்கள் கவலைப்படுவதால், பாதுகாப்பான புகலிட சொத்துக்களுக்கான தேவை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதற்கிடையில், இங்கிலாந்தின் ஈவ்லின் பார்ட்னர்ஸின் (Evelyn Partners) நிர்வாக இயக்குனர் ஜேசன் ஹோலண்ட்ஸ், தங்கத்தின் விலை அதிகரிப்பை, “தேர்வுக்கான பீதி சொத்து” என்று விபரித்துள்ளார். அத்துடன், Read More

Read More