#Police

LatestNews

சாரதிகளுக்கு வெளிவந்த எச்சரிக்கை! புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தேடுதல் பணிகள்!!

போதைப்பொருட்களை பயன்படுத்தி விட்டு வாகனங்களை செலுத்தும் நபர்களை கண்டறிவதற்காக புதிய தொழில்நுட்ப வசதிகள் அறிமுகப்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு அபராதம் செலுத்துவதற்காக இலகுவான வழிமுறையொன்றும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடனட்டை அல்லது வேறு முறையொன்றின் ஊடாக குறித்த அபராதம் செலுத்த முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதத்தின் படி புள்ளிகளைக் குறைக்கும் முறைமை தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Read More
LatestNews

விறகுவெட்டச் சென்ற குடும்பஸ்தருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாலை பகுதியில் விறகு வெட்டிய போது வெடி வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை 8.30 மணி அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அம்பலவன்பொக்கணை கிராம அலுவலர் பிரிவில் வசித்து வருகின்ற 35 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரும் அவருடைய மனைவியும் மகனும் சாலை பகுதியில் அமைந்திருக்கும் நீரேரியின் Read More

Read More
LatestNews

ஒன்லைன் கல்விக்கு ஏற்ற ‘ஸ்மார்ட் போன்’ இல்லை – தவறான முடிவெடுத்த மாணவன் – சோகத்தில் குடும்பம்!!

ஒன்லைன் மூலம் நடத்தப்படும் கல்விச் செயற்பாட்டில் பங்குபற்றுவதற்கு ஏற்ற ஸ்மார்ட் போன் இல்லாத காரணத்தால் வாரியபொல பகுதியில் உள்ள 10 ஆம் வகுப்பு மாணவன் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வாரியபொல காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. வாரியபொல புறநகரில் உள்ள ஒரு பாடசாலையில் கல்வி கற்கும் கவிந்து தில்ஹான் கேஷரா விஜேரத்ன என்ற 10 ஆம் வகுப்பு மாணவனே கடந்த (16) ஆம் திகதி தனது அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக வாரியபொல Read More

Read More
LatestNews

இரண்டு டோஸ்களையும் பெற்றுக் கொண்ட பொலிஸார் பலருக்கு கொரோனா!!

இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் முழுமையாக போடப்பட்ட சுமார் 300 க்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தடுப்பூசி பெற்றுக்கொண்டு சில வாரங்களுக்குப்பின் இவ்வாறு தொற்று ஏற்பட்டுள்ளது. பொலிஸ் திணைக்களம் இந்த நிலைமை குறித்து கவலை எழுப்பியதுடன், சுகாதார நிபுணர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடுமையான அறிகுறிகளால் பாதிக்கப்படுவதில்லை என்று குறிப்பிட்டுள்ளனர். தடுப்பூசிகளால் வைரஸின் கடுமையான பாதிப்பையும், இறப்புகளையும் தடுக்க முடியும் என்றாலும், மக்கள் கொரோனா நோயால் பாதிக்கப்படுவதை Read More

Read More
LatestNews

வெடிக்காத நிலையில் செல்கள் மீட்பு!!

கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காட்டுப்பகுதியில் 4 மோட்டர் செல்கள் மீட்கப்பட்டுள்ளது. இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது இவை மீட்கப்பட்டுள்ளது. குறித்த செல்களை நீதிமன்றின் அனுமதியுடன் செயலிழக்க செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அக்கரையான் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Read More
News

கொழும்பில் நடந்த துயரம் – இளம் தாய், குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!!

காலி – கொழும்பு வீதியில் பட்டம் ஒன்றில் இருந்த நைலோன் நூல் மோட்டார் சைக்கிளில் சிக்கியமையினால் அதில் பயணித்த தாய் மற்றும் ஒன்றரை வயதுடைய குழந்தை ஆகியோர் உயிரிழந்துள்ளனர். மேலும் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை மற்றும் 6 வயதுடைய சிறுவன் காயமடைந்த நிலையில் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலி – கொழும்பு பிரதான வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பட்டம் ஒன்றில் இருந்த நைலோன் நூல் வீதி Read More

Read More
LatestNews

சட்டவிரோத வியாபார நிலையங்கள் அகற்றல்- கிராமசேவகர் மீது தாக்குதல்!!

வவுனியா தாண்டிக்குளம் பிரிவு கிராமசேவகர் மீது நபர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றய தினம் மகாறம்பைக்குளம் பகுதியில் இடம்பெற்றது. வவுனியா தாண்டிக்குளம் எ9 வீதியின் கரையில் அரசுக்கு சொந்தமான காணியில் சில நபர்கள் சுற்றுவேலி அமைத்து, வியாபார நிலையங்களையும் அமைத்திருந்தனர். குறித்த விடயம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளிற்கமைய கடந்த 9 ஆம் திகதி அப்பகுதிக்குச்சென்ற வவுனியா பிரதேசசெயலாளர் தலைமையிலான குழுவினர் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அனுமதியற்ற வியாபாரநிலையங்களை அகற்றியிருந்தார். அந்த சம்பவத்தினை சுட்டிக்காட்டி தாண்டிக்குளம் பிரிவு Read More

Read More
LatestNews

பொது மக்களுக்கு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வெளியிட்டுள்ள எச்சரிக்கை!!

பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். பொது இடங்கள், கடைகள், வர்த்தக நிலையங்கள் உள்ளிட்டவற்றில் முகக் கவசம் அணியாதவர்களை கைது செய்ய விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இவ்வாறு முகக் கவசம் அணியாதவர்களை கைது செய்ய சிவில் உடையிலும் சீருடையிலும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அதிகளவில் செறிந்திருக்கும் இடங்களில் கட்டாயமாக முகக் கவசம் Read More

Read More
LatestNews

யாழ் நெல்லியடியில் குளிர்பானத்தால் சிக்கிய திருடனின் பகீர் வாக்குமூலம்!!

யாழ்ப்பாணம் வடமராட்சி, நெல்லியடி நகரில் உள்ள மருந்தகத்தை உடைத்து திருட்டில் ஈடுபட்ட இளைஞன், வேறு திருட்டுக்களிலும் ஈடுபட்டமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. போதைக்கு அடிமையான குறித்த இளைஞன், பணத்தேவைக்காக திருடியதாக கூறியுள்ளான். கடந்த 4ஆம் திகதி நெல்லியடி நகரிலுள்ள மருந்தகம் ஒன்றை உடைத்து திருட்டில் ஈடுபட்ட சம்பவம் சிசிரிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகியிருந்தன. அதோடு வர்த்தக நிலையத்திற்குள் குளிர்பானத்தை கண்டதும், முக மறைப்பை அகற்றி, குளிர்பானத்தை அருந்திய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இதனையடுத்து சம்பவம் தொடர்பில் Read More

Read More
LatestNews

வீதியில் பயணித்த முச்சக்கர வண்டியை மடக்கிய படையினர்!!

அல்லைப்பிட்டியில் முச்சக்கர வண்டியில் 6 கிலோ 500 கிராம் கேரள கஞ்சாவை கடத்திச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   ஊர்காவற்றுறை – அல்லைப்பிட்டியில் இன்று பிற்பகல் 1 மணிக்கு இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன் அவரிடமிருந்து 3 பொதிகளில் 6 கிலோ 500 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. அல்லைப்பிட்டி 3ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் Read More

Read More