கேரளாவில் 10 மாதங்களுக்கு பின் தியேட்டர்கள் திறப்பு… நாளை முதல் படமாக மாஸ்டர் வெளியீடு
கேரளாவில் 10 மாதங்களுக்கு பின் நாளை தியேட்டர்கள் திறக்க உள்ள நிலையில், முதல் படமாக மாஸ்டரை வெளியிட உள்ளனர். கேரளாவில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் தியேட்டர்களை கடந்த 5-ந் தேதி முதல் திறக்க அரசு அனுமதி வழங்கியது. தியேட்டர்கள் பல மாதங்களாக மூடிக்கிடந்ததால், உரிமையாளர்கள் நஷ்டத்தில் இருப்பதாகவும், அரசு கேளிக்கை வரியை ரத்து செய்து, மின் கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தியேட்டர்களை திறக்க மறுப்பு தெரிவித்தனர். Read More
Read more