News

FEATUREDLatestNews

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (19.05.2025) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. பல பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய, தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா, புத்தளம் மற்றும் கண்டி Read More

Read More
FEATUREDLatestNews

முள்ளிவாய்க்கால் ஒரு புண்ணிய பூமி : சிங்கள இளைஞனின் உருக்கமான பதிவு

தெற்கில் உள்ள சிங்கள மக்கள் வடக்கிற்கு செல்ல மே 18ஆம் திகதியே சிறந்த நாள் என முள்ளிவாய்க்கால் (Mullivaikkal) மண்ணில் இருந்து சிங்கள இளைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்காலில் நேற்று இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்ற பின்னர், முகநூலில் பதிவொன்றை வெளியிட்டு அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “நாங்கள் இன்று முள்ளிவாய்க்கால் மண்ணில் இருக்கின்றோம். இது ஒரு புண்ணிய பூமி. உயிரிழந்தோரை நினைவு கூர்ந்து அவர்களது உறவினர்கள் சுடர் ஏற்றி வழிபடுகின்றனர். ஆனால் Read More

Read More
FEATUREDLatestNews

சாதாரண தர பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களுக்கு வெளியான நற்செய்தி

உயர்தர தொழிற்கல்விப் பிரிவின் கீழ் தரம் 12 இல் சேர்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. குறித்த அறிவிப்பானது, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த ஆண்டு முதல் 608 பாடசாலைகளில் தொழிற்கல்விப் பிரிவு செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடையத் தவறியிருந்தாலும் இந்தப் பிரிவுக்கு மாணவர்களைச் சேர்க்கும்போது அது இங்கு கருத்தில கொள்ளப்படாது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சேர்க்கை கோரப்படும் பாடாசலையின் அதிபரிடம் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் Read More

Read More
FEATUREDLatestNews

புதிய உள்ளூராட்சி நிறுவனங்களை நிறுவதில் சிக்கல்!

உள்ளூராட்சி நிறுவனங்களை நிறுவதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பல அரசியல் கட்சிகளில் எழுந்துள்ள பல்வேறு சிக்கல்கள் மற்றும் நெருக்கடிகளினால் உறுப்பினர் பட்டியலை சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தாமதத்தைக் கருத்தில் கொண்டு, அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்களுக்கும் உறுப்பினர்களின் பெயர்களை ஒரு வாரத்திற்குள் அனுப்புமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு நியமிக்கப்பட வேண்டிய உறுப்பினர்கள் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை இந்தப் பெயர்கள் Read More

Read More
FEATUREDLatestNews

சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு (G.C.E O/L Exam) தோற்றிய மாணவர்களுக்கு இலங்கை பரீட்சைகள் திணைக்களம் (Department of Examinations) முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி குறித்த மாணவர்களுக்கான அழகியல் பாட செய்முறைப் பரீட்சைக்கான திகதி குறித்து பரீட்சைகள் திணைக்களம்  அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அந்தவகையில், அழகியல் பாட செய்முறைப் பரீட்சைகள் 2025.05.21 ஆம் திகதி தொடக்கம் 2025.05.31ஆம் திகதி வரை இடம்பெறும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் 171,100 Read More

Read More
FEATUREDLatestNews

இலங்கைக்கான பேருந்து இறக்குமதி குறித்து வெளியான தகவல்

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இலங்கைக்கு பொதுப் போக்குவரத்திற்காக பேருந்துகளை இறக்குமதி செய்யும் போது பல நிபந்தனைகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விடயத்தினை போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். அத்துடன் பாதுகாப்பான மற்றும் நவீனமான பேருந்துகளை மட்டுமே இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார். பொதுப் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்படும் வாகனங்கள் நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளின் கீழ் இயங்குகின்றனவா? Read More

Read More
FEATUREDLatestNews

அதிகரிக்கும் விபத்துகள் : காவல்துறைக்கு பறந்த உத்தரவு

விபத்துகள் அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு, நீண்ட தூர பேருந்து சேவைகளில், இரவு நேரங்களில் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளுமாறு அனைத்து காவல் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள், போதைப்பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் கவனக்குறைவாகவும் ஆபத்தானதாகவும் வாகனம் ஓட்டுபவர்கள் மீது சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நீண்ட தூர பேருந்துகளை ஆய்வு செய்வதற்காக இரவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பல பொருத்தமான இடங்களில் அதிகாரிகள் குழுக்களை நிறுத்தி , பேருந்துகளை ஆய்வு செய்யவும் திட்டங்கள் Read More

Read More
FEATUREDLatestNews

கூரை வேய்ந்து கீழே விழுந்தவருக்கு நேர்ந்த துயரம்

புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கூரை வேய்வதற்கு சென்று கீழே விழுந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் (Jaffna Teaching Hospital ) சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 8ஆம் வட்டாரம் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஜோர்ஜ் அன்ரனிதாஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கடந்த 20ஆம் திகதி கூரை வேய்வதற்கு சென்றுள்ளார். இதன்போது தவறுதலாக கூரையில் இருந்து விழுந்த நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு கொண்டு Read More

Read More
FEATUREDLatestNews

தேர்தல் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக ஊழியர்களுக்கு விடுமுறை வழங்குவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு (Elections Commission – Sri Lanka) விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையின்படி, ஊழியர் ஒருவர் வாக்களிப்பதற்காக விடுமுறை கோரினால், அது தொடர்பாக பணியமர்த்துபவர், ஊழியருக்கு போதுமானதாக கருதப்படும் குறைந்தபட்சம் இரண்டு மணி நேர பணி விடுமுறையை ஊதியத்துடன் வழங்க வேண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. வாக்களிக்க தகுதி பெற்றுள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் அவர்களது நிறுவனங்கள் விடுமுறை வழங்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் Read More

Read More
FEATUREDLatestNews

காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயற்சி… 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டம் உரி நாலாவில் எல்லை கட்டுப்பாட்டு பகுதி உள்ளது. இங்குள்ள சர்ஜீவன் பொதுப்பகுதி வழியாக 2 முதல் 3 தீவிரவாதிகள் இன்று காலை ஊடுருவ முயன்றனர். அங்கிருந்த பாதுகாப்பு படை வீரர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். உடனே தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படை வீரர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். உடனே தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படை வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினார்கள். இரு தரப்பினருக்கும் பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. பாதுகாப்பு Read More

Read More