FEATUREDLatestNewsTOP STORIESWorld

பணயக் கைதிகளை தூக்கிலிடுவோம்….. இஸ்ரேலுக்கு ஹமாஸ் பகிரங்க எச்சரிக்கை!!

முன்னெச்சரிக்கை எதுவுமின்றி பலஸ்தீன குடிமக்களின் வசிப்பிடங்கள் மீது தாக்குதல் நடத்தினால் பதிலடி நடவடிக்கையாக பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ள இஸ்ரேலியர்களை தூக்கிலிடுவோம் என ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை கடுமையாக எச்சரித்துள்ளது.

ஹமாஸ் ஆயுதப் பிரிவு செய்தித் தொடர்பாளர் அபு உபைடா இது தொடர்பாக தெரிவிக்கையில்,

இஸ்ரேலிய கைதிகளை பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதன் மூலம் இஸ்லாமிய அறிவுறுத்தல்களின்படி செயல்படுவதாகக் கூறினார்.

இஸ்ரேலின் தீவிரமான குண்டுவீச்சு மற்றும் பொதுமக்களை எச்சரிக்காமல் அவர்களின் வசிப்பிடங்கள் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்துவதாக கூறிய அவர் அதனை நிறுத்தாவிட்டால் இஸ்ரேல் பணயக்கைதிகளை தூக்கிலிடத் தொடங்குவோம் என எச்சரித்துள்ளார்.

இதனிடையே சனிக்கிழமையன்று ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலுக்குள் ஊடுருவிய பின்னர் டசின் கணக்கான இஸ்ரேலியர்கள் காஸாவில் சிறைபிடிக்கப்பட்டிருப்பதாக இஸ்ரேலிய அரசாங்கம் நம்புகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *