யாழ் மாவட்ட காவல்துறையினரின் விசேட ரோந்து நடவடிக்கை….. கோரிக்கை விடுத்த அமைச்சர்!!
வார இறுதி நாட்களில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தனியார் கல்வி நிலையங்களுக்கு அருகாமையில் காவல்துறையினரின் நடமாட்டத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்டத்தில் சனி ஞாயிறு ஆகிய தினங்களில் தனியார் வகுப்புகள் இடம் பெறும் இடங்களுக்கு அண்மையில் காவல்துறையினரின் ரோந்து நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்துமாறு ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.
விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக நேற்றையதினம் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதோடு குறித்த விடையத்தினை தொடர்ந்து செயற்படுத்துவதாக யாழ் மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபரால் உறுதியளிக்கப்பட்டது.
கடந்த வாரம் முதல் தனியார் வகுப்பு நிலையங்களுக்கு அருகில் காவல்துறையினரின் ரோந்து நடவடிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதோடு பாதுகாப்பு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.