படிப்படியாக சீனாவை விட்டு வெளியேறும் பன்னாட்டு நிறுவனங்கள்!!
கடந்த மாதம் சீனாவில் இருந்து அமெரிக்காவின் ‘மைக்ரோ சொப்ட்’(Microsoft) நிறுவனம் தனது லிங்க்ட் இன் (Linked in)சேவையை நிறுத்தியதை தொடர்ந்து பிரபல பன்னாட்டு நிறுவனமான ‘யாகூ’ (Yahoo)சீனாவில் இருந்து முற்றிலுமாக வெளியேறி உள்ளது.
இதேவேளை சீனா அரசு தற்போது பெரும் நிறுவனங்களுக்கு பல்வேறு சட்டங்களை விதித்துள்ளது. இதனால் பல வெளிநாட்டு நிறுவனங்கள் அதிருப்தி அடைந்துள்ளதுடன் சீன அரசின் நடவடிக்கைகள் பெரும் நிறுவனங்களுக்கு எதிராக உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ‘யாகூ’ (Yahoo)நிறுவனம் அங்கு நிலவும் சிக்கலான சட்டநிலை காரணமாக அனைத்து சேவைகளையும் கடந்த முதலாம் திகதி முதல் சீனாவில் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ‘யாகூ’(Yahoo) நிறுவனம் தரப்பில் கூறும் போது, ‘சீனாவில் தொழில் மேற்கொள்ள சவாலான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுவரை சீனாவில் எங்களுக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளது.
சீனாவில் இருந்து வெளியேறும் 2-வது அமெரிக்கா நிறுவனமாக ‘யாகூ(Yahoo) சேவையை நிறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.