கீழ் வளிமண்டல பிரதேச குறைந்த அழுத்தநிலைமை சில மணித்தியாலங்களில் தாழமுக்கமாக மாறக்கூடும்….. எச்சரிக்கையாக இருங்கள்!!
வங்காள விரிகுடாவில்கீழ் வளிமண்டல பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள குறைந்த அழுத்தநிலைமை, சில மணித்தியாலங்களில் தாழமுக்கமாக மாறக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இன்றைய வானிலை குறித்து வெளிவந்த அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மேகமூட்டமான வானிலையும் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.