வாகனம் வாங்க காத்திருப்போருக்குகான தகவல்!!

இலங்கையில் கடந்த வருடம் முதல் வாகனம் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாட்டில் வாகனங்களின் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய அதிகரிப்பை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிக விலையில் வாகனங்களை விற்பனை செய்வதன் காரணமாக எதிர்வரும் காலங்களில் மீண்டும் வாகனங்கள் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கிய பின்னர் லீசிங் நிறுவனங்கள் பாரிய வீழ்ச்சியடைந்து பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்பட கூடும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பாவனையில் உள்ள வாகனங்களை பாவிப்பது , வாகனங்களின் நிலையை வைத்து குறைந்த விலையில் லீசிங் வசதிகளை வழங்குவது மற்றும் இறக்குமதிக்கு தடை விதிப்பதன் காரணமாக சந்தையில் நிதியை நிலையாக வைப்பது பாரியளவிலான வாகன விலையை கட்டுப்படுத்துவதே அரசின் நோக்கம் ஆகும்.

மேலும்,

Corona Virus தொற்றினைதொடர்ந்து வாகன இறக்குமதிக்கு தடை விதித்ததன் காரணமாக அரசாங்கத்தால் 25கோடி ரூபா சேமிக்க முடிந்ததாக நிதி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *