வீதியில் பயணித்த குடும்பஸ்தர் மீது கத்திக்குத்து- தலைமறைவான சந்தேக நபர்!!

வவுனியாவில் இடம்பெற்ற கத்திக்குத்துச்சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையின் அவசரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் இரவு வவுனியா பெரியார்குளம் பகுதியில் இடம்பெற்றது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

காயமடைந்த நபர் நேற்றைய தினம் இரவு மகாறம்பைக்குளம் பகுதியில் இருந்து பெரியார்குளம் நோக்கி முச்சக்கர வண்டியை ஓட்டிசென்றிருந்தார்.

இதன்போது பெரியார்குளம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் வழிமறித்து குறித்த சாரதியை கத்தியால் கடுமையாக தாக்கியுள்ளார்.

இதனால் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில், தாக்குதலை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் நபரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் முன்னெடுத்துவருகின்றனர்.

தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணமும் இது வரை வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *