இன்று ஆரம்பமாகிறது ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது கூட்டத்தொடர்!!
இன்று ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை 22ஆம் திகதி விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.
அதனையடுத்து 23, 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள உணவு மற்றும் வலு சக்தி தொடர்பான உயர்மட்ட அமர்வுகளிலும் அரச தலைவர் உரையாற்றவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது பொதுச் சபை அமர்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி தலைமையிலான தூதுக்குழுவினர் 18ஆம் திகதி நியூ யோர்க் சென்றடைந்தனர்.
அமர்வின் இரண்டாம் நாள் பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உரை நிகழ்த்தவுள்ளார். அதேவேளை 23ஆம் திகதி நடைபெறவுள்ள உணவுத் தொகுதி மாநாடு மற்றும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள மின் சக்தி தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடலிலும் பங்கேற்று கருத்துக்களை முன்வைக்கவுள்ளார்.
மாநாட்டு அமர்வின் இடைப்பட்ட காலங்களில் பல்வேறு நாடுகளினதும் அரச தலைவர்களை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவுள்ளதாக ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொதுச் சபை அமர்வின் வெளிநாட்டமைச்சர்களுக்கான மாநாடு நேற்று 20ஆம் திகதி முற்பகல் ஆரம்பமானதுடன் அந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளினதும் வெளிநாட்டு அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளனர்.