உலங்கு வானூர்திகள் வானில் மோதி பயங்கர விபத்து….. பயணித்த 13 பேரில் நால்வர் இதுவரை பலி!!
அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட்(Gold Coast) அருகே இரண்டு உலங்கு வானூர்தி வானில் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
அவர்களில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கோல்ட் கோஸ்ட்டின்(Gold Coast) பிரதான கடற்கரைக்கு அருகில் உள்ள மணல் திட்டில் விமானங்களின் சிதைவுகள் வீழ்ந்ததுடன்,
இன்று (02/01/2023) பிற்பகல் இரண்டு மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தின் போது,
இரண்டு விமானங்களிலும் 13 பேர் பயணித்துள்ளதாகவும்,
அவர்களில் 4 பேர் உயிரிழந்ததாகவும்,
மேலும் 3 பேர் படுகாயமடைந்ததாகவும்,
6 பேர் காயமடைந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
குயின்ஸ்லாந்து(Queensland) மாநில காவல்துறையின் செயல் ஆய்வாளர் கிரே வொரல் கூறுகையில்,
“ஒரு உலங்கு வானூர்தி மணல் நிறைந்த கடற்கரையில் பத்திரமாக தரையிறங்கியது.
ஆனால்,
மற்ற உலங்கு வானூர்தி இடிபாடுகள் அணுக முடியாத பகுதியில் சிதறிக் கிடந்தது.
விபத்துக்குள்ளான உலங்கு வானூர்தியில் பயணம் செய்த 3 பேரும் பலத்த காயங்களுடன் உயிரிழந்தனர். பொதுமக்களும் காவல்துறையினரும் மக்களை காப்பாற்ற முயன்றனர்.
அவர்கள் முதலுதவியைத் தொடங்கினர்.
மற்றும் கவிழ்ந்த ஏர்ஃப்ரேமில் இருந்து அந்த மக்களை மீட்க முயன்றனர்.” என்று கூறினார்.