உக்ரைனுக்கு தாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள், ஏவுகணைகளை அனுப்பவுள்ள ஜேர்மனி!!

‘ஜேர்மனி 1,000 தாங்கி எதிர்ப்பு ஆயுதங்களையும் 500 “ஸ்டிங்கர்” தரையிலிருந்து வானில் தாக்கும் ஏவுகணைகளையும் உக்ரைனுக்கு அனுப்பவுள்ளது’ என்ற தகவலை அந்தநாட்டு அரசு உறுதிசெய்துள்ளது.

மோதல் நிகழும் பகுதிகளுக்கு ஆயுத ஏற்றுமதியைத் தடை செய்யும் அதன் நீண்டகால கொள்கையில் பெரிய மாற்றத்தை இந்த நடவடிக்கை காட்டுகிறது.

“இந்தச் சூழ்நிலையில்,

விளாடிமிர் புடினின் இராணுவத்திற்கு எதிராக உக்ரைனை பாதுகாப்பதில் எங்களால் முடிந்தவரை ஆதரவளிப்பது எங்கள் கடமை,” என்று ஜேர்மன் அரசுத் தலைவர் ஓலோஃப் ஸ்கோல்ஸ் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *