திருகோணமலையில் சிறுவர்களை பலியெடுத்த படகு விபத்து சந்தேக நபர்களுக்கு நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு!

கிண்ணியா – குறிஞ்சாக்கேணி மிதப்பு பாலம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் திருகோணமலை நீதிவான் நீதிமன்றினால் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கைதான மிதப்பு பால உரிமையாளர் உள்ளிட்டோரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மற்றுமொரு சந்தேக நபர் கிண்ணியா நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். நளீம், கடந்த 10 ஆம் திகதி திருகோணமலை நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

திருகோணமலை குறிஞ்சாக்கேணியில் கடந்த மாதம்  மிதப்புப் பாலம் நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 4 சிறுவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்ததுடன் 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் சம்பவம் குறித்து முன்னெடுத்த விசாரணைகளையடுத்து கிண்ணயா காவல்துறை பிரிவில் ஒருவரும், திருகோணமலை காவல்துறை பிரிவில் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

விசாரணைகளுக்காக சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *