திடீரென அதிகரித்த சீனி விலை – கையை விரித்தது அரசாங்கம்

சீனியின் விலை திடீரென அதிகரித்த நிலையில் தம்மால் ஒன்றும் செய்ய இயலாது என அரசாங்கம் கையை விரித்துள்ளது.

நாட்டில் இன்று சீனி கிலோ ஒன்றின் விலை 210 ரூபா வரை திடீரென அதிகரித்துள்ளது.

கடந்த வாரத்தில் சீனி விலை 160 ரூபாவாக காணப்பட்டது. எனினும் திடீரென 50 ரூபாவினால் விலை உயர்ந்துள்ளது.

எனினும் இவ்வாறு சீனி விலையின் திடீர் உயர்வுக்கு தம்மால் ஒன்றும் செய்ய இயலாது என்று பாவனையாளர் அலுவல்கள் தொடர்பான இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *