யாழில் அடித்து கொல்லப்பட்ட இளைஞன்….. நீதி கோரி “காக்கி உடையில் கொடூர மிருகங்களா” என்ற பதாதைகளுடன் வீதிக்கு இறங்கிய மக்கள்!!

யாழ்ப்பாணம்  வட்டுக்கோட்டை காவல்துறையினரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞனுக்கு நீதி கோரி சித்தங்கேணி சந்தியில் சடலத்துடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உயிரிழந்த இளைஞனின் இறுதிச் சடங்குகள் அவரின் இல்லத்தில் நடைபெற்று வருகிறது.

குறித்த இளைஞனின் இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலெக்ஸின் மரணமானது வட்டுக்கோட்டை காவல்துறையினரின் கோர முகத்தை எடுத்துக் காட்டுவதுடன் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில்,

சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை கைது செய்யுமாறு கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும்,

அப்பாவி இளைஞனை அடித்து கொலை செய்த காவல்துறையினர் கைது செய்யப்பட வேண்டும்.

அலெக்ஸிற்கு நீதி வேண்டும் என்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *