விமானத்தினுள் உணவில் பாம்பின் தலை….. பரபரப்பை ஏற்படுத்திய காணொளி!!
விமானத்தில் பரிமாறப்பட்ட உணவில் பாம்பு தலை ஒன்று இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கி தலைநகர் அங்காராவில் இருந்து ஜெர்மனிக்கு கடந்த ஜூலை 21ம் தேதி விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.
அப்போது விமானத்தில் உணவு பரிமாறப்பட்டது.
இதை சாப்பிட்டுக்கொண்டிருந்த ஊழியர் ஒருவர் உருளைக்கிழங்கு, காய்கறிகளுடன் சேர்ந்து பாம்பின் தலை இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
Twitter பதிவை பார்வையிட இங்கே அழுத்துக……………………………..
இதன் பின்னர்,
அதை வீடியோவாக எடுத்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட,
வைரலனாதும் சன் எக்ஸ்பிரஸ் என்ற விமான நிறுவனம் இந்த தகவலை அறிந்ததும் உடனடி நடவடிக்கைக்கு உத்தரவிட்டு உள்ளது.
உரிய விசாரணைக்கு பின் இத்தகைய செயல்பாடுகளை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும்
அந்த விமான நிறுவனத்துக்கு உணவு விநியோகம் செய்யும் நிறுவனத்தின் ஒப்பந்தத்தையும் நிறுத்தி வைத்துள்ளது.