இன்று மட்டக்களப்பு நகரை சென்றடைந்து நிறைவடைந்தது….. மாணவர் எழுச்சி பேரணி!!

வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணியின் இறுதி நாளான இன்று(07/02/2023) மட்டக்களப்பு நகரை பேரணி சென்றடைந்துள்ளது.

இந்த பேரணியை வரவேற்பதற்காகவும் பிரகடனத்திற்காகவும் பெவர் மைதானம்.

தமிழர்தாயகத்தின் அரசியல் அபிலாசைகள் வலியுறுத்தும் பேரணி இன்று(07/02/2023) மட்டக்களப்பு காந்தி மைதானத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டாலும் மக்களின் எழுச்சி மற்றும் திரள்நிலை காரணமாக பிரகடன அறைகூவல் நிகழ்வு மட்டக்களப்பு வெபர் மைதானத்துக்கு மாற்றப்பட்டதாக தெரியவருகிறது.

எனினும்,

இலங்கை காவல்துறையினர் இதற்கு அனுமதிவழங்காததால் எழுச்சியுடன் மைதானத்துக்குள் பிரவேசிக்க அறவழியாளர்களும் முயற்சிப்பதாக பிந்திக்கிடைத்த செய்திகள் தெரிவித்துள்ளன.

வடக்கில் இருந்த கிழக்கு நோக்கிய பேரணி தற்போது மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழகத்தை சென்றடைந்து,

அங்கு அமைக்கப்பட்டுள்ள பொங்கு தமிழ் பிரகடனம் முன்பாக,

பேரணியாக சென்றோர் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *