வலிமை படத்தின் 2வது சிங்கிள் புரமோ….. கொண்டாடடத்தில் ரசிகர்கள்!!

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் வலிமை படத்தின் 2வது சிங்கிள் புரமோ வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் வலிமை படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடந்து வருகின்றன. வலிமை திரைப்படம் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீசாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் ஏற்கனவே அறிவித்தார். இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். முன்னதாக இந்தப் படத்தின் ‘நாங்க வேற மாறி’ Read More

Read more

டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வர இருக்கும் “வீரமே வாகை சூடும்”

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் தற்போது ‘வீரமே வாகை சூடும்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். நடிகர் விஷால் நடிப்பில் தற்போது ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கி உள்ளார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக இளம் நடிகை டிம்பிள் ஹயாத்தி நடித்துள்ளார். மேலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் யோகிபாபுவும், மலையாள நடிகர் பாபுராஜ் வில்லனாகவும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு கவின் ராஜ் ஒளிப்பதிவு Read More

Read more

கார்த்தி ஜோடியாகும் ஷங்கரின் மகள்!!

திரைப்பட இயக்குநர் ஷங்கரின் மகள் நடிகர் கார்த்தி ஜோடியாக நடிக்கிறார். கார்த்தி நடிக்கும் விருமன் படத்தின் மூலம் அறிமுகமாகும் அவருக்கு வாழ்த்து குவிந்து வருகிறது. நடிகர் சூர்யா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் விருமன் படத்தின் First Look ஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். சூர்யாவின் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான 2D என்டர்டைன்மென்ட் சார்பாக, கார்த்தி கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருந்தார். இதைத்தொடர்ந்த நடிகர் சூர்யா தயாரிப்பில் மீண்டும் அவரது சகோதரர் கார்த்தி Read More

Read more

ஒலிம்பிக் வீரர்களை வாழ்த்தி யுவன் இசையமைத்த பாடல் – முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்!!

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களை உற்சாகப்படுத்துகின்ற வகையில், ‘‘வென்று வா வீரர்களே’’ என்ற பாடலை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உருவாக்கி உள்ளார். மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த 120க்கும் மேற்பட்ட வீரர்கள் தகுதிப் பெற்றுள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்துகின்ற வகையில், ‘வென்று வா Read More

Read more