உலக நாடுகளுக்கு ஈரான் வெளிவிவகார அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை

இஸ்ரேல் – ஹமாஸ் பிரச்சினைகள் ஒரு புறம் இருக்க, ஈரான் உலக நாடுகளுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றினை விடுத்துள்ளது. காசாமீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால் வேறு போர்முனைகளில் மோதல்கள் வெடிக்கலாம் என  ஈரான் வெளிவிவகார அமைச்சு ஹுசைன் அப்டொலாகியன் தெரிவித்துள்ளார். பெய்ரூட்டிற்கான விஜயத்தின்போது ஹெஸ்புல்லா குழு குறித்தே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். காசாமீதான தொடரும் வன்முறைகள் யுத்தகுற்றங்கள் மற்றும் முற்றுகை காரணமாக இன்னொரு போர்முனை திறக்கப்படுவது யதார்த்தமான விடயம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  

Read more

பொதுமக்கள் தஞ்சமடைந்த தியேட்டரை அழித்திருக்கிறார்கள்…… நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை!!

உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் இன்று 22 ஆவது நாளாக தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது. தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் கடுமையாக நடந்து வருகிறது. துறைமுக நகரமான மரியுபோலில் போர் தொடங்கிய நாளில் இருந்தே தாக்குதல் அதிகமாக இருந்து வருகிறது. உக்ரைனின் முக்கிய துறைமுக நகரமான மரியுபோலை உருக்குலைக்க ரஷ்யா தொடர்ந்து ஏவுகணை, குண்டுகளை வீசி வருகிறது. மேலும், மரியுபோல் நகரில் இருந்து வெளியேறும் மக்களை ரஷ்ய படைகள் தடுத்து Read More

Read more

மகப்பேறு மற்றும் குழந்தைகள் வைத்தியசாலை மீது ரஷ்யா மூர்க்கத்தனமான விமானத் தாக்குதல்(பதறவைக்கும் காணொளி)!!

உக்ரைனின் தென் பிராந்தியத்தில் உள்ள மரியுபோல் நகரில் உள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் வைத்தியசாலை மீது ரஷ்யா விமானத் தாக்குதலை நடத்தியுள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. வைத்தியசாலை வளாகம் மீதான இந்த தாக்குதலானது யுத்தக் குற்றமென உக்ரைன் அதிபர் வெலெடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். அதேவேளை, மிகப் பெரிய அழிவு ஏற்பட்டுள்ளதாக மரியுபோல் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. மரியுபோலில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மற்றும் மகப்பேறு வைத்தியசாலை மீதான தாக்குதலுக்கு கண்டனம் வெளியிட்ட Read More

Read more

உலகின் மிகப்பெரிய போர் விமானம் உக்ரைனால் சுட்டு வீழ்த்தப்பட்ட்து!!

உலகின் மிகப்பெரிய போர்விமானமான ஏ என்-255 விமானம் தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலெபா தெரிவித்துள்ளார். மேலும். ” எங்கள் கனவு போர்விமானத்தை ரஷ்யா அழித்திருக்கலாம்.   ஆனால், வலுவான ஜனநாயக, சுதந்திரமான ஐரோப்பிய நாடாக விளங்குவது குறித்த எங்கள் கனவை அவர்களால் அழிக்க முடியாது ” என்றும் தெரிவித்திருந்தார். உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலெபா அவர்களின் Twitter பதிவை பார்வையிட இங்கே சொடக்குக……   

Read more

அமெரிக்காவிடமிருந்து உக்ரைனுக்கு போர் ஆயுதங்கள்!!

முதன்முறையாக உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைன் மீது ரஷ்யா நாட்டு படைகள் தொடர்ந்து 5வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், வெள்ளை மாளிகையால் அங்கீகரிக்கப்பட்ட தொகுப்பின் ஒரு பகுதியாக போர் விமானங்களை எதிர்கொள்ளும் அதிவேக ஏவுகணைகளை நேரடியாக உக்ரைனுக்கு வழங்க அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அந்த ஆயுதங்களை உக்ரைனுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த Read More

Read more

உக்ரைன் – ரஷ்யா இடையே கடும் போர்ப்பதற்றம்!!

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பு நடத்தவுள்ளதாக வெளியாகும் தகவல்கள் உலக நாடுகளை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் ரஷ்யாவும் பெலாரஸும் பெருமெடுப்பிலான 10 நாட்கள் கூட்டு இராணுவ ஒத்திகையை ஆரம்பித்துள்ளன. பெலாரஸ், ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடு மற்றும் உக்ரைனுடன் நீண்ட எல்லையைக் கொண்டுள்ளது. பனிப்போருக்குப் பிறகு பெலாரஸுக்கு ரஷ்யாவின் மிகப்பெரிய வரிசைப்படுத்தல் என்று நம்பப்படும் இந்த பயிற்சிகளை பிரான்ஸ் இது ஒரு “வன்முறை சைகை”என தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் இந்த பயிற்சி ஒரு “உளவியல் அழுத்தம்” என்று உக்ரைன் Read More

Read more