வவுனியாவில் உள்ள சூரிய மின் உற்பத்தி நிலையத்தில் தீ பரவல்!!

வவுனியா கள்ளிக்குளத்தில் அமைந்துள்ள சூரிய மின் உற்பத்தி நிலையத்தில் நேற்று இரவு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 10 மணியளவில் கள்ளிக்குளத்தில் அமைந்துள்ள சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்யும் நிலையத்திலேயே திடீரென இவ்வாறு தீப்பற்றியது. இந்த தீப்பரவலின் போது அந்நிலையத்தில் புதிதாக பொருத்துவதற்கென வைக்கப்பட்டிருந்த சூரிய ஒளி மின்உற்பத்தி உபகரணங்கள் தீப்பற்றி எரிந்தன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினர் தீயிணை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும், புதிதாக பொருத்துவதற்கென Read More

Read more

பாரவூர்த்தி கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது மோதல்….. சம்பவ இடத்திலேயே இளைஞர் மரணம்!!

வவுனியாவில் வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற  விபத்தில் சம்பவ இடத்திலேயே இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெரியவருகையில், விபத்தில் இளைஞன் ஒருவர் பலியாகியதோடு மற்றையவர் படுகாயமடைந்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஓமந்தை பகுதியில் இருந்து சென்ற பாரவூர்த்தி கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதோடு, அருகில் அமைந்துள்ள புதிய வர்த்தக கட்டிட தொகுதியிலும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் மோட்டார் Read More

Read more

கணேசபுரம் காட்டுப் பகுதியிலில் 16 வயது சிறுமி ஒருவரின் சடலம் மீட்பு!!

வவுனியா கணேசபுரம் காட்டுப் பகுதியிலிருந்து சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 16 வயதுடைய ராசேந்திரன் யதுசி என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த சிறுமி தாய் தந்தையினை இழந்த நிலையில் மாமாவின் அரவணைப்பில் வசித்து வந்த நிலையில் நேற்று மதியம் தனியார் கல்வி நிலையம் சென்றதன் பின்னர் மாலை 5.30 வரை வீடு திரும்பவில்லை. இதனையடுத்து, குறித்த சிறுமியினை தேடிய உறவினர்கள் அவரைக் கண்டு பிடிக்க முடியாமையால் நெளுக்குளம் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர் முறைப்பாட்டிற்கு Read More

Read more

திடீரென தீப்பற்றியெரிந்தது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி!!

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி திடீரென தீப்பற்றியெரிந்ததால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்றைய தினம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா புகையிரதநிலைய வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனையடுத்து, அங்கிருந்தவர்களால் தீ உடனடியாக அணைக்கப்பட்ட நிலையில் பாரிய அசம்பாவிதம்  தவிர்க்கப்பட்டிருந்தது. குறித்த தீ விபத்து காரணமாக முச்சக்கர வண்டி பகுதியளவில் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more

மூதாட்டிக்கு மயக்க மருந்து கலந்து கொடுத்து நகைகளை சூறையாடிய 21 வயது பெண்!!

வவுனியாவில் மூதாட்டிக்கு மயக்க மருந்து கலந்த சோடாவை கொடுத்து அவர் மயங்கியதும் அவரிடமிருந்து தங்க நகைகளை திருடிச் சென்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வவுனியா, பண்டாரிக்குளம் நாவலர் வீதியில் வசிக்கும் மூதாட்டி சுகயீனம் காரணமாக கடந்த புதன்கிழமை மருந்து எடுப்பதற்காக வவுனியா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். மருந்து எடுத்து விட்டு குறித்த வயோதிப பெண் வைத்தியசாலையில் இளைப்பாறிய வேளை அங்கு வந்த யுவதி ஒருவர் Read More

Read more

தொடர்ந்து பல நகை வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் பதிவு!!

வவுனியாவில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றது. குருமண்காடு, யாழ் வீதி, இறம்பைக்குளம், கோவில்குளம் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களில் சங்கிலி அறுப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. நேற்றையதினம் இறம்பைக்குளதில் தனிமையில் இருந்த வயோதிப பெண்ணிடம் கத்தியை காட்டி பணம் மற்றும் தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது. இதேவேளை, கோவில்குளத்திலும் பெண்ணொருவரிடம் தங்க சங்கிலியை திருடர்கள் அறுத்து சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Read more

வவுனியா யுவதி றம்பொடையில் சடலமாக மீட்ப்பு….. மேலும் இருவர் மாயம்!!

வவுனியாவிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலாச்சென்றவேளை, நுவரெலியா – கொத்மலை, றம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மூன்று பேரில், யுவதியொருவரின் சடலம் இன்று (13/04/2022) காலை மீட்கப்பட்டுள்ளது. ஏனைய ஒரு யுவதியும், இளைஞனும் நீரிழ் மூழ்கி பலியாகியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அவர்களின் சடலங்களை மீட்பதற்கான தேடுதல் வேட்டை தொடர்ந்து 2ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது. வடமாகாணத்தில் வவுனியா மாவட்டத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணிபுரியும் இளைஞர், யுவதிகள் 48 பேர் பேரூந்து ஒன்றில் புத்தாண்டை முன்னிட்டு மலையகத்தில் நுவரெலியாவுக்கு Read More

Read more

பெண் ஒருவரின் மோட்டார்சைக்கிளில் மோதிய முதியவர் தலை மீது ஏறியது பிறிதொரு வாகனம் ஏறி விட்டு தப்பியோட்டம்….. சம்பவ இடத்திலேயே முதியவர் பலி!!

வவுனியா, பாரதிபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அத்துடன், விபத்துடன் தொடர்புடைய வாகனம் ஒன்று தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்து இன்று மதியம் இடம்பெற்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.   மேலும் தெரியவருகையில், வவுனியா, நெளுக்குளம் – செட்டிகுளம் வீதியில் பாரதிபுரம் 50 வீட்டுத் திட்ட சந்திக்கு அண்மையில் உள்ள தம்பனைப் புளியங்குளம் பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.   வவுனியா- நெளுக்குளம் பகுதியில் இருந்து செட்டிகுளம் நோக்கிச் சென்ற பெண் Read More

Read more

இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினரை ஆயுதம் தாங்கி நாடளாவிய ரீதியில் குவிக்க அதிவிசேட வர்த்தமானி!!

நாடளாவிய ரீதியில் ஆயுதம் தாங்கிய படையினரை நிறுத்துவதற்கு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12ஆவது பிரிவு (அத்தியாயம் 40) மூலம்  கோட்டாபய ராஜபக்ச, தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். அதற்கமைய, இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நாடு முழுவதும் பொது அமைதியை பேணுமாறு ஆயுதம் தாங்கிய படையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்றின் மூலம் உத்தரவிட்டுள்ளார். கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, Read More

Read more

பாரவூர்தி மோதியதில்….. சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பெண்!!

கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா கனகராயன்குளம் பகுதியில் காலையில் பேருந்திற்காக  காத்திருந்த பெண் மீது பாரவூர்தியொன்று மோதியதில் அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 33 வயதான பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கனகராயன்குளம் பகுதியில் பேருந்திற்காக காத்திருந்த தந்தையும் மகளும் Read More

Read more