#Today

LatestNewsTOP STORIES

வர்த்தக நிலையங்கள் முழுமையாகவும், பகுதியளவிலும் திறந்தாலும் மக்கள் நடமாட்டம் யாழில் பயங்கர வீழ்ச்சி!!

நாடு தழுவிய ரீதியில் இன்று கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் யாழ்ப்பாண நகரத்தில் அரச பேருந்துகள் சேவையில் ஈடுபட்டுள்ளன. அத்துடன, தனியார் பேருந்துகள் எவையும் சேவையில் ஈடுபடவில்லை என்பதுடன்  வர்த்தக நிலையங்கள் சில முழுமையாகவும் பெரும்பாலான நிலையங்கள் பகுதியளவிலும் திறந்துள்ளன. எனினும், மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்படுகின்றது. இந்நிலையில், எரிபொருள் நிரப்பு நிலையங்களில், மக்கள் வரிசையில் நின்று எரிபொருளை நிரப்பிச் சென்றனர். அதேவேளை, பெரும்பாலான பாடசாலைகளில் மாணவர்கள் குறைவாக காணப்பட்டதுடன் ஆசிரியர்களும் சமூகமளித்திருந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More
LatestNewsTOP STORIES

இன்றைய மின்தடை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!!

எரிபொருள் இருப்புகளைப் பொறுத்து இன்று திட்டமிடப்பட்ட மின்தடை நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது அல்லது குறைக்கப்படலாம் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க (Janaka Ratnayake) தெரிவித்துள்ளார். இன்று முதல் மின் துண்டிப்பை குறைப்பதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், பொதுமக்கள் மின்சாரத்தை தொடர்ந்தும் சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கோரியுள்ளது.

Read More
LatestNewsTOP STORIES

மழை பெய்யக் கூடிய சாத்தியம்….. வளிமண்டலவியல் திணைக்களம்!!

நாட்டின் பல பாகங்களிலும் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.   மேலும் இன்றைய தினதிதிற்கான வானிலை அறிக்கையின் படி,   “வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யலாம்.   வடக்கு மாகாணத்தில் சிறிதளவான மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.   மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது Read More

Read More
LatestNewsTOP STORIES

50 அடி பள்ளத்தில் விழுந்த டிப்பர்….. ஒருவர் மரணம் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வத்துகாமம் – எல்கடுவ வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று (12) இரவு இடம்பெற்ற இவ்விபத்தில் 32 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். வத்துகாமம் – எல்கடுவ வீதியில் பயணித்த டிப்பர் ஒன்று சுமார் 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. இதனால், டிப்பரில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், சாரதி காயமடைந்துள்ள நிலையில், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை வத்துகாமம் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.  

Read More