ஜனாதிபதி மாளிகையிலிருந்து ஆர்ப்பாட்டக்காரர்களால் மீட்கப்பட்ட 17.8 மில்லியன் பணம் தொடர்ப்பில்….. காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிக்கை!!

கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையிலிருந்து ஆர்ப்பாட்டக்காரர்களால் 17.8 மில்லியன் பணம் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளதை காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், மொத்தம் ரூ. 17,850,000 ரூபாவை கோட்டை காவல் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான காவல்துறை குழுவிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளித்தனர். பணத்தை கண்டுபிடித்த குழுவினரால் அறிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த காவல்துறை குழுவினர் பணத்தை சேகரித்துள்ளனர். பணத்தை மீளப்பெற்றது தொடர்பில் காவல்துறையினர் இன்று (11/07/2022) நீதிமன்றத்திற்கு அறிவிக்கவுள்ளதாக காவல்துறை விடுத்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more