மேலும் 22 ஆயிரம் பட்டதாரிகளை இணைக்க அமைச்சரவை அனுமதி!!

ஆசிரியர் சேவைக்கு 22 ஆயிரம் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிப்படுகிறன்றது. 2018, 2019, 2020 பட்டமளிப்பு திட்டத்தின் கீழ் தற்போது அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ள 35 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்களை பெறுவதற்கும் வெற்றிடங்களை நிரப்புவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

Read more

21வது சீர்திருத்த உத்தேச வரைபு வெளியிடப்பட்டது!!

சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 21வது சீர்திருத்ததின்படி அரசியலமைப்பு பேரவை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என 21வது சீர்திருத்த உத்தேச வரைபு குறிப்பிடுகின்றது.   21ஆவது திருத்த சட்டத்தின் உத்தேச வரைபு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. குறித்த வரைவில்   நிறைவேற்று அதிகாரமிக்க அரச தலைவர் முறையை நீக்கும் முகமாக அரசியலமைப்பின் 21வது சீர்திருத்தம் நேற்று (23/05/2022) விஜயதாச ராஜபக்சவால் நேற்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.   இதேவேளை, கட்சி தலைவர்களின் பார்வைக்காக 21 ஆம் சீர்திருத்த பிரதிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதா பிரதமர் Read More

Read more

ஜனாதிபதி கோட்டாபய முன்னிலையில் 10 புதிய அமைச்சரவை அமைச்சர்கள் சற்றுமுன்னர் நியமிக்கப்பட்டனர்!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் மேலும் 10 புதிய அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை 11:06 மணிக்கு இவர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். ஏற்கனவே, 13 அமைச்சரவை அமைச்சர்கள்  பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். இந்நிலையில், இன்றும் புதிதாக 10 அமைச்சர்கள் அரச தலைவர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். அதற்கமைய புதிய அமைச்சர்களாக, கெஹலிய ரம்புக்வெல்ல– நீர் வழங்கல் அமைச்சு ரொஷான் ரணசிங்க – நீர்ப்பாசன அமைச்சு விதுர விக்ரமநாயக்க – கலாசார அமைச்சு டக்ளஸ் தேவானந்தா – Read More

Read more

அமைச்சர்களுக்குரிய சம்பளம் வழங்கப்பட மாட்டாது….. பிரதமர் ரணில் விக்ரமசிங்க!!

புதிய அமைச்சரவையில் நியமிக்கப்பட்ட மற்றும் நியமிக்கப்படவுள்ள அமைச்சர்களுக்கு அமைச்சர்களுக்குரிய சம்பளம் வழங்கப்பட மாட்டாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். புதிதாக அமைச்சர்கள் நியமிக்கப்படும்போது, அவர்களுக்கு அமைச்சர்களுக்குரிய சம்பளம் வழங்கப்பட மாட்டாது என்பதுடன், சில சிறப்புரிமைகளும் குறைக்கப்படும் என இன்றைய பாராளுமன்ற அமர்வில் பிரதமர் ரணில் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பிரதமர் அலுவலக செலவுகளை குறைக்க முடிவு Read More

Read more

‘அஜித் ராஜபக்ஸ’ புதிய பிரதி சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டார்!!

இன்று(17/05/2022) முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற அமர்வு ஆரம்பமானது. இதன்போது குறித்த இருவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதையடுத்து, புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பிரதி சபாநாயகர் பதவிக்காக ஐக்கிய மக்கள் சக்தியின் ரோஹினி கவிரத்ன மற்றும் பொதுஜன பெரமுன கட்சியின் அஜித் ராஜபக்ஸ ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. இதனையடுத்து, பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு ஆரம்பமாகியது.   அஜித் ராஜபக்ஸவிற்கு ஆதரவாக 109 வாக்குகளும் ரோஹினி கவிரத்னவிற்கு ஆதரவாக Read More

Read more

இன்று பதவியேற்கும் நான்கு அமைச்சர்கள்!

நான்கு அமைச்சர்கள் இன்று அரச தலைவர் முன்னிலையில் பதவியேற்க உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, ஜி.எல்.பீரிஸ், பிரசன்ன ரணதுங்க, காஞ்சன விஜேசேகர மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோர் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னதாக ஜி.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகவும் காஞ்சன விஜேசேகர மின்சக்தி எரிசக்தி அமைச்சராகவும் , தினேஷ் குணவர்தன கல்வி அமைச்சராகவும் , பிரசன்ன ரணதுங்க பொது பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்தனர். இந்நிலையில், தற்பொழுதும் அவர்களுக்கு அதே அம்மைச்சு பதவிகளே வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.    

Read more

அதிகரிக்கப்பட்டது நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புகள்!!

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்காக உப காவல் பரிசோதகர் ஒருவர் உட்பட 6 அதிகாரிகளை நியமிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் அமைச்சர்களின் பாதுகாப்பு பிரிவு இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்காக குறித்த நியமனங்களை நியமிக்குமாறு காவல் அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 9 ஆம் திகதி ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை தீவைத்து வருகின்றன நிலையில் அவர்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Read more

33 வீடுகள் உட்பட்ட மொத்தமாக 37 சொத்துக்கள் தீக்கிரையானகின….. முழுமையான விபரங்கள்!!!

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்குச் சொந்தமான 33 வீடுகள் மொத்தமாக நேற்று இரவு எரிக்கப்பட்டன.   சில தனியார் சொத்துக்களும் அரசியல்வாதிகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் காரணத்திற்காக எரிக்கப்பட்டன. மொத்தமாக எரிக்கப்பட்ட சொத்துகளின் விபரங்கள் வருமாறு, 1. முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பூர்வீக மெதமுலனை இல்லம்.   2. முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் குருநாகல் இல்லம்.   3. புத்தளத்தில் சனத் நிஷாந்தவின் இல்லம்.   4. பண்டாரவளையில் ஜனக திஸ்ஸ Read More

Read more

வருமானம் குறைவான குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை அனுமதி!!

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கே இவ்வாறு நிவாரணம் வழங்கப்படவுள்ளது. அதன்படி, அடையாளம் காணப்பட்ட 3.34 மில்லியன் குடும்பங்களுக்கு மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை விசேட பண கொடுப்பனவு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

தற்காலிக கூடாரங்களை அகற்றியதால் நடு வீதியை வீடாக்கிய போராட்டகாரர்கள்!!

அலரிமாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியின் நடுவே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அலரிமாளிகைக்கு அருகில் வீதியோர போராட்டக் கூடாரங்களை காவல்துறையினர் அகற்றியதையடுத்து அவர்கள் இவ்வாறு நடுவீதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.   இதனால், அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி அலரி மாளிகைக்கு முன்பாக மைனாகோகமவில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று 7 ஆவது நாளாகவும் தொடர்கிறமை குறிப்பிடத்தக்கது.

Read more