அத்தியாவசிய சேவைகள் நாளை வழமை போல் இயங்கும்….. நாங்கள் போராடடத்துக்கு ஆதரவளிக்க போவதில்லை!!

நாளை மே 6 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ள வேலைநிறுத்தத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளதாக அரச தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது. குறுகிய அரசியல் ஆதாயங்களை அடைவதற்காக பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இந்த வேலைநிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர். தங்களுடைய சேவைகளை தடையின்றி வழங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர். நேற்று முன்தினம் (03/04/2022) மாலை கொழும்பு கோட்டையில் Read More

Read more

எதிர்வரும் 06 மற்றும் 11 ஆம் திகதிகளில் முதல் நாடு முழுவதும் தொடர் ஹர்த்தால்….. இணை அழைப்பாளர் வசந்த சமரசிங்க!!

எதிர்வரும் 6ம் திகதி நடைபெறவுள்ள ஹர்த்தாலின் பின்னர் அரசாங்கம் வீட்டுக்குச் செல்லாவிட்டால் எதிர்வரும் 11/05/2022 ம் திகதி முதல் நாடு முழுவதும் தொடர் ஹர்த்தால் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் இணை அழைப்பாளர் வசந்த சமரசிங்க விடுத்துள்ள விசேட அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார். எதிர்வரும் 6ம் திகதி அரசாங்கத்திற்கு ஒத்திகை வழங்கப்படவுள்ளதாகவும் அதன் பின்னரும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் பதவி விலகாவிட்டால் நாடு பூராகவும் சகல துறைகளிலும் தொடர்ச்சியான ஹர்த்தால் முன்னெடுக்கப்படும் எனவும் சமரசிங்க Read More

Read more

மீண்டும் மின்கட்டணங்கள் உயர்வு!!

அரசாங்கத்தின் கொள்கையைப் பெற்றவுடன் மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பொதுமக்களிடம் கருத்துக் கோரலை நடத்தவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. நீர் மின் பற்றாக்குறையால் அதிக எரிபொருளைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் ஒரு அலகு மின்சாரத்துக்கான செலவு அதிகரித்துள்ளது. இலங்கை மின்சார சபை ஒரு அலகு மின்சாரத்துக்கு 53 ரூபாவை செலவழித்த போதிலும் நுகர்வோர் ஒருவருக்கு 16 ரூபாவே அறவிடப்படுகின்றது. இதேவேளை, கடந்த 8 வருடங்களாக மின்சார கட்டணம் அதிகரிக்கப்படவில்லையென பொதுப் Read More

Read more

100க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களின் பாரிய வேலை நிறுத்தப் போராட்டம் நாளை!!

அரசாங்கத்திற்கு எதிராக நாளை பல தொழிற்சங்கங்களின் பங்குபற்றுதலுடன் பாரிய வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. அரசு பதவி விலகக் கோரி 100க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன. அரசு, பொது மற்றும் பெருந்தோட்டத் துறைகளின் தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன. இவற்றைவிட, அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கம் அரசாங்கத்திற்கு எதிராக நாளை ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளது. 2,40,000 ஆசிரியர்கள் மற்றும் 16,000 Read More

Read more

வைபவங்களில் trending ஆகியுள்ள “கப்புட்டு காக்கா காக்கா” பாடல்!!

திருமண வைபவங்களில் பாடப்படும் “கப்புட்டு காக்கா.. காக்கா…” காலத்திற்கு காலம் பல பாடல்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருவதுண்டு இவ்வாறு பிரபலமாகும் பாடல்கள் பல்வேறு வைபவங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பாடப்பட்டு வருகிறது. இவ்வாறான தற்போது இளைஞர்கள் மத்தியில் பிரபலமான, போராட்டக் களத்திலும் அடிக்க ஒலிக்கும் பாடல் தற்போது திருமணம் வைபவங்கள் உட்பட மங்கள நிகழ்ச்சிகளில் பாடப்பட்டு வருகிறது. “கப்புட்டு காக்கா காக்கா” என்ற பாடல் தற்போது திருமண வைபவங்களில் பாடப்பட்டு வருவதுடன் அவற்றில் கலந்துக்கொள்ளும் இளைஞர், யுவதிகள் Read More

Read more

கண்டியிலிருந்து கொழும்பு வரை பாரிய பாதயாத்திரை!!

அரச தலைவர் மற்றும் அரசாங்கத்தை பதவி விலக வலியுறுத்தி எதிர்வரும் 26 ஆம் திகதி கண்டியில் இருந்து கொழும்பு வரை பாரிய பாதயாத்திரை ஒன்றை ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கவுள்ளது. இது சுதந்திரப் போராட்டத்தின் அணிவகுப்பு என்று அழைக்கப்படுகிறது. நடைபவனியின் இறுதியில் மே 1ஆம் திகதி கொழும்பில் பாரிய பேரணியை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read more

அரசுக்கு எதிராக அரச அலுவலகத்திற்குள் ஆர்ப்பாட்டம்!!

மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் நேற்றைய தினம் வியாழக்கிழமை (21/04/2022) அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். மாந்தை மேற்கு பிரதேச சபையின்  48 ஆவது அமர்வு நேற்று மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது சபை உறுப்பினர்கள் சபையில் கறுப்புப் பட்டி அணிந்து அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளுடன் சபை அமர்வில் கலந்து கொண்டிருந்தனர். இதில் கலந்து கொண்ட உறுப்பினர்களின் ஏகமனதான தீர்மானத்திற்கு அமைவாக அரசாங்கத்திற்கு Read More

Read more

கோட்டாபயவை பதவி விலகவைக்க பல கட்சிகளின் தலைவர்கள் கூட்டு தீர்மானம்!!

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு பல கட்சிகளின் தலைவர்கள் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்படவுள்ளது. இதேவேளை, அனைத்துக் கட்சித் தலைவர்களும் கோரினால் அரச தலைவர் பதவி விலகத் தயார் என சபாநாயகர் கட்சித் தலைவர்களிடம் தெரிவித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாச நாடாளுமன்றில் இன்று தெரிவித்தார். எனினும், எதிர்க்கட்சித் தலைவரின் கருத்தை சபாநாயகர் முற்றாக மறுத்துள்ளார்.   கோட்டாபய Read More

Read more

புதிய அமைச்சரவை நாளை மறுநாள் பதவியேற்பு!!

புதிய அமைச்சரவை எதிர்வரும் 18ஆம் திகதி திங்கட்கிழமை பதவிப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாக அரசாங்கத்தின் நம்பகத் தகவல்கள் தெரிவிப்பதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது. மே 18-ம் தேதி சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) பேச்சுவார்த்தைக்காக அரசாங்கக் குழு செல்ல உள்ளது. அரசாங்கத்தின் புதிய அமைச்சுப் பதவிகளை ஏற்குமாறு பல கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும் அவர்கள் பதவி ஏற்காத பட்சத்தில் முன்னாள் அமைச்சர்களைக் கொண்ட புதிய அமைச்சரவையை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேலும் பல உயர் Read More

Read more

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றியை கொண்டாடிய சிங்கள பாடலை எழுதியவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்பு!!

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றியின் பின்னர் ‘”யுபோ வெவ மகாராஜனேனி” (ayubowewa maharajaneni)பாடலை எழுதியமைக்காக பாடலாசிரியர் ‘சுனில் ஆர்.கமகே’ பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். பாடலை எழுதியதற்காக மக்கள் நீதிமன்றம் தன்னை விடுதலை செய்யும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். பாடலை இங்கே click செய்து பார்வையிடுங்கள்….. காலி முகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் இன்று தான் இருந்த இடத்தில் இல்லை என்றும், இன்று Read More

Read more