பயாகல – பேருவளை வீதியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட தனியார் விமானம்….. காரணம் என்ன!!

தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான சிறிய ரக விமானமொன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். பயாகல மற்றும் பேருவளை ஆகிய நகரங்களுக்கு இடையில் குறித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. பயிற்சி ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறிய ரக விமானமொன்றே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளதாகவும் தரையிறக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் விமானத்தில் பயிற்றுவிப்பாளரும் மாணவர் ஒருவரும் இருந்துள்ளதாகவும் மேலும் தெரியவருகின்றது. மீட்புப் பணிகளுக்காக விமானப்படை குழுவொன்று சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக விமானப்படை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more