எம்.ஏ.சுமந்திரனின் பாதுகாப்பு கடமையிலிருந்த இராணுவ சிப்பாய் தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!!

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் பாதுகாப்பு கடமையில் இருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் சொந்த துப்பாக்கியால் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.   22 வயதான குறித்த இராணுவ வீரரின் சடலம் இன்று அதிகாலை வெள்ளவத்தையில் மீட்கப்பட்டுள்ளது.   உயிரிழந்தவர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனின் கொழும்பு வெள்ளவத்தையில் அமைந்துள்ள இல்லத்திற்கு செல்லும் ஒழுங்கையில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தார் என மேலும் குறிப்பிடப்படுகின்றது.

Read more

முகநூல் நண்பனிடம் மோட்டார் வாகனத்தை பறிகுடுத்த விமானப்படை சிப்பாய்!!

கொழும்பு, பம்பலப்பிட்டியில் முகநூல் நண்பனிடம் விமானப்படை சிப்பாய் ஒருவர் மோட்டார் வாகனத்தை கொள்ளையடித்து சென்றுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த நண்பனை மிகவும் நுட்பமாக பம்பலப்பிட்டியவுக்கு வரழைத்து அவரது 28 லட்சம் ரூபாய் பெறுமதியான மோட்டார் வாகனத்தை திருடி சென்று வாடகை வாகனமாக மாற்றிய விமாப்படையின் முன்னாள் சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த சந்தேக நபர் மோட்டார் வாகனத்தில் காட்சிப்படுத்திய போலி தகடு, போலி ஆவணங்கள், அதனை தயாரிக்க பயன்படுத்திய பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் அனைத்தும் காவல்துறையினாரினால் Read More

Read more

விபத்துக்குள்ளாகி தரையில் மோதி இரண்டாக உடைந்த விமானம்….. இதுவரை 13 பேர் மரணம்!!

ரஷ்யாவின் டாடர்ஸ்தான் குடியரசு பகுதியில் பாராசூட் வீரர்கள் உள்ளிட்ட 23 பேருடன் சென்ற விமானம் இன்று விபத்துக்குள்ளானது. குறித்த விமானம் தரையில் மோதி இரண்டாக உடைந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் சிக்கிய 16 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பலத்த காயமடைந்த 7 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விபத்துக்குள்ளான விமானம் ரஷ்யாவின் Read More

Read more