#Ranil

FEATUREDLatestNewsTOP STORIES

எரிபொருள் கப்பல் வருகை தெடர்பாக மகிழ்ச்சியான செய்தி!!

எரிபொருள் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து, இலங்கை கனிய எண்ணெய் விநியோகஸ்தர்கள் சங்கத்தினருக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையே நேற்றைய தினம் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாகல ரத்நாயக்க, பெரும்பாலும் 15 ஆம் அல்லது 16 ஆம் திகதி நாட்டுக்கு எரிபொருள் கப்பல் வரும் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார். மேலும், எரிபொருள் கிடைக்காமையால் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை கனிய எண்ணெய் விநியோகஸ்தர்களினால் இதன்போது பிரதமருக்கு விரிவான விளக்கமளிக்கப்பட்டுள்ளது. Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

கொழும்பில் மீண்டும் போராடடம் – படையெடுக்கும் மக்கள்…… கண்ணீர்ப்புகைத் தாக்குதல்!!

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன் போது பேரணில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப்புகைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகை ஆகிய பகுதிகளில் அமைதியான முறையில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடந்த மே 9ஆம் திகதி குழுவொன்றால் தாக்கப்பட்டிருந்தனர். இந்த சம்பவம் இடம்பெற்று ஒரு மாதம் பூர்த்தியாவதை நினைவு கூர்ந்தும், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் இதுவரையில் கைது செய்யப்படாமையை கண்டித்தும் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

புதிய வரி அறவீட்டு முறைமைகளை பிரதமர் அறிவித்துள்ளமை நம்பிக்கையளிக்கிறது….. W.A.விஜேவர்தன!!

இலங்கை மத்திய வங்கி மீதான தேவையற்ற தலையீடுகள் நாட்டின் பொருளாதார மீட்சியைக் கேள்விக்குள்ளாக்கும் என இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் டபிள்யூ.ஏ.விஜேவர்தன எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கை மத்திய வங்கியினால் ஏற்பாடு செய்யப்பட்ட, நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலை தொடர்பில் ஆராயும் நோக்கிலான கலந்துரையாடலில் அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் கருத்துக்களை பகிர்ந்த அவர், “அரச ஊழியர்களுக்கான சம்பளக்கொடுப்பனவை இடையூறின்றி மேற்கொள்வதற்கு பில்லியன் கணக்கான ரூபாய்களை அச்சிடவேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்ட கருத்து பல்வேறு கரிசனைகளைத் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

எரிபொருள் விலை மேலும் அதிகரிக்கப்படலாம்….. பிரதமர் ரணில் பகிரங்கம்(உரையின் முழுமையான விபரங்கள்)!!

எரிபொருள் விலை மேலும் அதிகரிக்கப்படலாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். இலங்கையில் மட்டுமன்றி உலகலாவிய ரீதியில் எரிபொருளுக்கான கேள்வி அதிகரித்துள்ளமையால் எரிபொருளின் விலை மேலும் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார். நாமும் நம் நாடும் எதிர்கொள்ளும் சூழ்நிலையை நீங்கள் அனைவரும் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். இந்தநிலையில், இருந்து நாட்டை உயர்த்த வேண்டுமானால் பாரம்பரிய முறைகளுக்கு மாற்றாக புதிய வழிகளை கண்டுபிடிக்க வேண்டும். எமது பாரம்பரிய அரசியல் சித்தாந்தங்களை குறுகிய Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

21வது சீர்திருத்த உத்தேச வரைபு வெளியிடப்பட்டது!!

சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 21வது சீர்திருத்ததின்படி அரசியலமைப்பு பேரவை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என 21வது சீர்திருத்த உத்தேச வரைபு குறிப்பிடுகின்றது.   21ஆவது திருத்த சட்டத்தின் உத்தேச வரைபு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. குறித்த வரைவில்   நிறைவேற்று அதிகாரமிக்க அரச தலைவர் முறையை நீக்கும் முகமாக அரசியலமைப்பின் 21வது சீர்திருத்தம் நேற்று (23/05/2022) விஜயதாச ராஜபக்சவால் நேற்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.   இதேவேளை, கட்சி தலைவர்களின் பார்வைக்காக 21 ஆம் சீர்திருத்த பிரதிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதா பிரதமர் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

மூலதனச் செலவினங்களை கணிசமாகக் குறைக்கும் வகையில் புதிய வரவு செலவுத் திட்டம்….. பிரதமர் ரணில்!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று வர்த்தக சபைகள், திறைசேரி மற்றும் பொருளாதார ஆலோசகர்களின் பிரதிநிதிகளை சந்தித்து புதிய வரவு செலவு திட்டம் மற்றும் எதிர்கால பொருளாதார திட்டங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளார். பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, ​​மூலதனச் செலவினங்களை கணிசமாகக் குறைக்கும் வகையில் புதிய வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார். உக்ரைன் யுத்தத்துடன், உள்ளூர் சந்தையின் தவறான நிர்வாகத்தினால் உணவுப் பற்றாக்குறையை நாடு எதிர்கொண்டுள்ளதாக பிரதமர் மேலும் விளக்கமளித்துள்ளார். இந்த Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

ஜனாதிபதி கோட்டாபய முன்னிலையில் 10 புதிய அமைச்சரவை அமைச்சர்கள் சற்றுமுன்னர் நியமிக்கப்பட்டனர்!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் மேலும் 10 புதிய அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை 11:06 மணிக்கு இவர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். ஏற்கனவே, 13 அமைச்சரவை அமைச்சர்கள்  பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். இந்நிலையில், இன்றும் புதிதாக 10 அமைச்சர்கள் அரச தலைவர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். அதற்கமைய புதிய அமைச்சர்களாக, கெஹலிய ரம்புக்வெல்ல– நீர் வழங்கல் அமைச்சு ரொஷான் ரணசிங்க – நீர்ப்பாசன அமைச்சு விதுர விக்ரமநாயக்க – கலாசார அமைச்சு டக்ளஸ் தேவானந்தா – Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

நாடாளுமன்ற கண்காணிப்பு குழுவில் ‘கோட்டா கோ கம’ ஆர்ப்பாட்டக்காரர்ககாரர்களை இணைக்க பிரதமர் முடிவு….. அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோ!!

சிறிலங்கா நாடாளுமன்ற கண்காணிப்பு குழுவில் ‘கோட்டா கோ கம‘ ஆர்ப்பாட்டக்காரர்கள் இருவரை இணைத்துகொள்ள பிரதமர் திட்டமிட்டுள்ளார் என புதிய அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களின் பிரதிநிதிகளை சந்திப்பதற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விருப்பம் வெளியிட்டுள்ளார் எனவும் அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் தங்களது போராட்டத்தைத் தொடராலாம். ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

நிறுவப்பட்ட்து “ஆர்ப்பாட்ட செயலகம்”….. இலங்கையிலுள்ள மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி ஆலோசனை அறிக்கையை இரு நாட்களில் வெளியிடவுள்ளோம்!!

அரசாங்கத்துக்கு எதிராக காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று 43 ஆவது நாளை எட்டியுள்ளதுடன், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பான பதாதைகள் அதிகளவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அரச தலைவரை பதவி விலகுமாறு வலியுறுத்தி காலிமுகத்திடலில் இளைஞர்களால் கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி இப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில், அரச தலைவர் செயலகத்திற்கு முன்பாக உள்ள பகுதியில் நேற்று இரவு போராட்டக்காரர்களால் “ஆர்ப்பாட்ட செயலகம்” திறந்து வைக்கப்பட்டதுடன், ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றும் ஏற்பாடு செய்யபட்டிருந்தது. இலங்கை வரலாற்றில் நீண்ட நாட்கள் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஆளும் கடசிக்குமிடையே மோதல்….. பகிரங்கமாக கூறிய மைத்திரி!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஆளும் கட்சியான சிறிலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் மோதல்களும் தோன்ற ஆரம்பித்துள்ளது என்பது தெளிவாக தெரிகின்றது என முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து உரையாற்றிய அவர், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானத்திற்கு மாறாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டுள்ளனர். அமைச்சுப் பதவிகளை ஏற்காமல் அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான யோசனைகளுக்கு மாத்திரம் ஆதரவளிக்க சிறிலங்கா சுதந்திரக் கட்சி Read More

Read More