#Ranil Wickramasinghe

FEATUREDLatestNewsTOP STORIESWorld

அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான தேவையற்ற பலப்பிரயோகத்தை “ஐரோப்பிய ஒன்றியம்” வன்மையாகவும் கண்டிப்பு!!

இலங்கையின் போராட்டக்காரர்கள் மீது தேவையில்லாத வன்முறைகள் நடப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில், அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான தேவையற்ற பலப்பிரயோகத்தை வன்மையாகவும் கண்டித்துள்ளது.   மற்றும், அமைதியான ஒன்றுகூடல் மற்றும் சங்கத்தின் சுதந்திரத்திற்கான உரிமையின் முக்கியத்துவத்தையும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் நேற்று கடுமையான அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, இலங்கையின் புதிய அரசாங்கம் அதன் GSP+ உறுதிமொழிகளுக்கு முழுமையாக இணங்கிச் செயற்படும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

8 ஆவது நிறைவேற்று அதிகார அதிபராக ரணில் இன்று காலை பதவியேற்கவுள்ளார்!!

8 ஆவது நிறைவேற்று அதிகார அதிபராக ரணில் விக்ரமசிங்க இன்று(21/07/2022) காலை பதவியேற்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை, அவரது பதவியேற்பு நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது. மகிந்த ராஜபக்சவின் ராஜினாமாவிற்கும் கோட்டாபய ராஜபக்ஷ அதிகாலையில் தப்பிப்பதற்கும் காரணமான எதிர்ப்பாளர்களின் தியாகம் மற்றும் அர்ப்பணிப்புகளை முதலிகே நினைவு கூர்ந்தார்.   எவ்வாறாயினும், நாடாளுமன்ற சதிப்புரட்சியை அடுத்து ரணில் விக்கிரமசிங்க நாட்டின் அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 6.9 மில்லியன் ஆணை இழக்கப்பட்டது அதிபர் தப்பி ஓட வேண்டியிருந்தது. ஆனால், Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கும் அவசர நிவாரண வேலைத்திட்டம்….. ரணிலின் அதிரடி திடடம்!!

பொருளாதார நெருக்கடியால் சிரமப்படும் பொதுமக்களுக்கு எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கும் அவசர நிவாரண வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பதில் அதிபர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். இன்று (16/07/2022) காலை அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார். நிவாரணம் வழங்குவதற்காக ஓகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்படும் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் மேலதிக நிதியை பயன்படுத்தவும் குறித்த கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டுள்ளது. எரிபொருள் மற்றும் உரங்களை முறையாகவும் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

ஊடகத்தினரை அழைத்து அலரி மாளிகையின் தற்போதைய நிலையை காண்பித்த திணைக்களத்தினர்!!

கடந்த (09/07/2022) ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி விலக கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் ஒரு பகுதியாக பிரதமரின் அலரி மாளிகை போராட்டகாரர்களால் கைப்பற்றப்பட்டது. எனினும், நேற்று முன்தினம் போராட்டக்காரர்கள் அதனை (14/07/2022) சம்பந்தப்பட்ட திணைக்களத்திடம் கையளித்துள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்ட அலரி மாளிகையின் தற்போதைய நிலை குறித்து அறிந்து கொள்ள பத்திரிகையாளர்கள் அழைக்கப்பட்டனர்.

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

ஜனாதிபதி மாளிகையிலிருந்து ஆர்ப்பாட்டக்காரர்களால் மீட்கப்பட்ட 17.8 மில்லியன் பணம் தொடர்ப்பில்….. காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிக்கை!!

கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையிலிருந்து ஆர்ப்பாட்டக்காரர்களால் 17.8 மில்லியன் பணம் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளதை காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், மொத்தம் ரூ. 17,850,000 ரூபாவை கோட்டை காவல் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான காவல்துறை குழுவிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளித்தனர். பணத்தை கண்டுபிடித்த குழுவினரால் அறிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த காவல்துறை குழுவினர் பணத்தை சேகரித்துள்ளனர். பணத்தை மீளப்பெற்றது தொடர்பில் காவல்துறையினர் இன்று (11/07/2022) நீதிமன்றத்திற்கு அறிவிக்கவுள்ளதாக காவல்துறை விடுத்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

போராட்டத்தில் கிடைத்த வெற்றியை கொண்டாட முற்படடவார்…… பரிதாபமாக மரணம்!!

நேற்று முன்தினம்(10/07/2022) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியிலிருந்து விலகுமாறு கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் வெற்றி கிட்டியதை அடுத்து  தேசியக் கொடியுடன் மின்கம்பத்தில் ஏறியவர் பரிதாபகரமாக உயிரிழந்தார். அவரது சடலம் அலவ்வ கபுவரல புகையிரதப் பாதையில் நேற்று (10/07/2022) கண்டெடுக்கப்பட்டுள்ளது. அலவ்வ குடுமுல்ல பகுதியைச் சேர்ந்த சமிந்த லால் குமார் (39 வயது) என்பவரே சடலமாக மீடகப்பட்டவராவார். இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அலவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

கொழும்பில் மீண்டும் போராடடம் – படையெடுக்கும் மக்கள்…… கண்ணீர்ப்புகைத் தாக்குதல்!!

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன் போது பேரணில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப்புகைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகை ஆகிய பகுதிகளில் அமைதியான முறையில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடந்த மே 9ஆம் திகதி குழுவொன்றால் தாக்கப்பட்டிருந்தனர். இந்த சம்பவம் இடம்பெற்று ஒரு மாதம் பூர்த்தியாவதை நினைவு கூர்ந்தும், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் இதுவரையில் கைது செய்யப்படாமையை கண்டித்தும் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

புதிய வரி அறவீட்டு முறைமைகளை பிரதமர் அறிவித்துள்ளமை நம்பிக்கையளிக்கிறது….. W.A.விஜேவர்தன!!

இலங்கை மத்திய வங்கி மீதான தேவையற்ற தலையீடுகள் நாட்டின் பொருளாதார மீட்சியைக் கேள்விக்குள்ளாக்கும் என இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் டபிள்யூ.ஏ.விஜேவர்தன எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கை மத்திய வங்கியினால் ஏற்பாடு செய்யப்பட்ட, நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலை தொடர்பில் ஆராயும் நோக்கிலான கலந்துரையாடலில் அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் கருத்துக்களை பகிர்ந்த அவர், “அரச ஊழியர்களுக்கான சம்பளக்கொடுப்பனவை இடையூறின்றி மேற்கொள்வதற்கு பில்லியன் கணக்கான ரூபாய்களை அச்சிடவேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்ட கருத்து பல்வேறு கரிசனைகளைத் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

எரிபொருள் விலை மேலும் அதிகரிக்கப்படலாம்….. பிரதமர் ரணில் பகிரங்கம்(உரையின் முழுமையான விபரங்கள்)!!

எரிபொருள் விலை மேலும் அதிகரிக்கப்படலாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். இலங்கையில் மட்டுமன்றி உலகலாவிய ரீதியில் எரிபொருளுக்கான கேள்வி அதிகரித்துள்ளமையால் எரிபொருளின் விலை மேலும் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார். நாமும் நம் நாடும் எதிர்கொள்ளும் சூழ்நிலையை நீங்கள் அனைவரும் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். இந்தநிலையில், இருந்து நாட்டை உயர்த்த வேண்டுமானால் பாரம்பரிய முறைகளுக்கு மாற்றாக புதிய வழிகளை கண்டுபிடிக்க வேண்டும். எமது பாரம்பரிய அரசியல் சித்தாந்தங்களை குறுகிய Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

21வது சீர்திருத்த உத்தேச வரைபு வெளியிடப்பட்டது!!

சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 21வது சீர்திருத்ததின்படி அரசியலமைப்பு பேரவை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என 21வது சீர்திருத்த உத்தேச வரைபு குறிப்பிடுகின்றது.   21ஆவது திருத்த சட்டத்தின் உத்தேச வரைபு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. குறித்த வரைவில்   நிறைவேற்று அதிகாரமிக்க அரச தலைவர் முறையை நீக்கும் முகமாக அரசியலமைப்பின் 21வது சீர்திருத்தம் நேற்று (23/05/2022) விஜயதாச ராஜபக்சவால் நேற்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.   இதேவேளை, கட்சி தலைவர்களின் பார்வைக்காக 21 ஆம் சீர்திருத்த பிரதிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதா பிரதமர் Read More

Read More