மழை பெய்யக் கூடிய சாத்தியம்….. வளிமண்டலவியல் திணைக்களம்!!

நாட்டின் பல பாகங்களிலும் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.   மேலும் இன்றைய தினதிதிற்கான வானிலை அறிக்கையின் படி,   “வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யலாம்.   வடக்கு மாகாணத்தில் சிறிதளவான மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.   மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது Read More

Read more

எதிர்வரும் வாரம் முதல் வடக்கின் பலபகுதிகளுக்கும் பரவலாக மிதமானது முதல் கனகனமழை வரை கிடைக்கும் வாய்ப்பு….. மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா!!

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இன்று (27) ஞாயிற்றுக்கிழமை பிற்பகலுக்கு பின்னர் தாழமுக்கம் ஒன்று உருவாக வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியற்றுறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா ( Nagamuthu Pradeeparaja) எதிர்வு கூறியுள்ளார். இதன் காரணமாக, எதிர்வரும் 02.03.2022 புதன்கிழமை முதல் 05.03.2022 சனிக்கிழமை வரை வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் பரவலாக மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக 03.03.2022 வியாழக்கிழமை, 04.03.2022 வெள்ளிக்கிழமை மற்றும் 05.03.2022 சனிக்கிழமை ஆகிய நாட்களில் வடக்கு Read More

Read more

மிதமானது முதல் கனமழை வரை கிடைக்க வாய்ப்புள்ளது….. விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா!!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பரவலாக மிதமானது முதல் கனமழை வரை கிடைக்க வாய்ப்புள்ளது என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா (Nagamuthu Pradeeparaja) தெரிவித்துள்ளார். வங்காள விரிகுடாவில் புதிய தாழமுக்கம் உருவாகுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. இதனால், இன்று (20) முதல் 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை மழை கிடைக்க வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார். நெல், வெங்காயம், உழுந்து ஆகிய பயிர்களின் அறுவடைச் செயற்பாடுகளை மேற்கொள்ளும் விவசாயிகள் இதனை Read More

Read more

அவ்வப்போது சிறிய அல்லது ஓரளவு பெரிய மழை பெய்யும்!!

நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை பெய்யும் சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இன்றைய வானிலை அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யலாம். மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய Read More

Read more

ஒருபுறம் தீ, மறுபுறம் மழை அவுஸ்திரேலியாவை உலுக்கும் காலநிலை!!

மேற்கு அவுஸ்திரேலியாவின் கிரேட் சதர்ன் பிராந்தியத்தில் காட்டு தீ மேலும் தீவிரமடையும் என மாநிலத்தின் தீயணைப்பு மற்றும் அவசர சேவை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அவுஸ்திரேலியாவில் நிலவி வரும் கடுமையான வானிலை மாற்றம் காரணமாக காட்டுத் தீயும், மழையும் வெளுத்து வாங்கி வருகிறது. மேற்கு அவுஸ்திரேலியாவின் பரந்த நிலப்பரப்பில் உள்ள புதர் நிலங்களில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. அதே நேரத்தில், நாட்டின் கிழக்குப் பகுதியில் கனமழையும் பெய்து வருகிறது. கடந்த ஜனவரியில் ஆறு நாட்களாக தொடர்ந்து Read More

Read more

இலங்கையை விட்டு நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்!!

இலங்கைக்குத் தென்கிழக்காக காணப்பட்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது தெற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது. அது இன்று(18) நாட்டை விட்டு விலகி கிழக்குத் திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றதெனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. இன்றைய வானிலை முன்னறிவிப்பு அறிக்கையின் படி, “வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ Read More

Read more

அவ்வப்போது ஓரளவு பலத்த மழை!!

இலங்கை முழுவதும் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றமையால் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை  பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை  என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, Read More

Read more

இன்று புதிய ஒரு தாழமுக்கம் உருவாகும் வாய்ப்பு….. நாகமுத்து பிரதீபராஜா!!

வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு அருகே இன்று புதிய ஒரு தாழமுக்கம் உருவாகும் வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை குறித்து தனது முகப்புத்தக பதிவொன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார். குறித்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இது புயலாக மாறுவதற்கான வாய்ப்புக்கள் மிக அதிகமாக உள்ளன. இப்புயல் எதிர்வரும் 04.12.2021 சனிக்கிழமை இந்தியாவின் விசாகப்பட்டினத்துக்கே அருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலைமையின்படி இந்தப் புயலால் Read More

Read more

தொடர்ந்தும் இலங்கைக்கு கிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம்….. எச்சரிக்கையாக இருங்கள்!!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்காள விரிகுடாவில் காணப்பட்ட குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் இலங்கைக்கு கிழக்காக நிலை கொண்டுள்ள நிலையில், இன்று வெளியான வானிலை அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. குறித்த் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாடு முழுவதும் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன் மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் குறிப்பாக காலை வேளையில் பனிமூட்டமான காலநிலை காணப்படும் Read More

Read more

75 mm அளவான பலத்த மழைவீழ்ச்சி….. முன்னெச்சரிக்கையாக இருங்கள்!!

வட அந்தமான் கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் மேற்கு திசையை அண்டி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், இன்று தென் ஆந்திரப் பிரதேசத்தையும் அண்மையாகவுள்ள வட தமிழ்நாடு கரையையும் கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டிற்கு கிழக்காக உள்ள ஆழம் கூடிய கடற்பரப்புகளில் நடவடிக்கைகளில் ஈடுபடும் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாகவும் எதிர்கால முன்னறிவிப்புகள் தொடர்பாகவும் அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள். வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலைமாவட்டத்திலும் Read More

Read more