சர்வகட்சி ஆட்சிக்கு இடமளிக்கும் வகையில்….. பல அமைச்சர்களால் பதவி விலகல் கடிதங்கள் ஜனதிபதிக்கு அனுப்பிவைப்பு!!

சர்வகட்சி ஆட்சிக்கு இடமளிக்கும் வகையில் பல அமைச்சர்கள் பதவி விலக தீர்மானித்துள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்று (11/07/2022) காலை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே விஜயதாச ராஜபக்ஷ இதனை தெரிவித்தார். இதேவேளை, சர்வகட்சி ஆட்சிக்கு வழி வகுக்கும் வகையில் அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் பதவி விலக தீர்மானித்துள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று(11/07/2022) காலை பிரதமர் அலுவலகத்தில் அமைச்சரவை அமைச்சர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார் Read More

Read more