சர்வதேச தாதியர் தினம்(May 12) இன்றாகும்!!

சுகாதார சேவையின் மகத்துவம் அன்றும் இன்றும் மிக முக்கிய சேவையாக காணப்படுகின்றது. புளோரன்ஸ் நைட்டிங்கேல் (Florence Nightingale) அறிமுகப்படுத்திய தாதிச் சேவை உலக உயிர்வாழ்விற்கான இன்றியமையாத காரணியாக அமைந்துள்ளமையே அதற்கான காரணமாகும். நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த Florence Nightingale-இன் பிறந்த நாளான மே 12ஆம் நாளை சிறப்பாக நினைவுகூரும் வகையில் இன்றைய நாளில் சர்வதேச தாதியர் தினம் அனுஷ்ட்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். 1899ஆம் ஆண்டில் சர்வதேச தாதியர்களுக்கான பேரவை எடுத்த தீர்மானத்திற்கமைவாக ஆண்டு தோறும் Read More

Read more

சுகாதார தொழிற்சங்க சம்மேளனம் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை!!

இன்று முதல் 2 நாட்களுக்கு மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைளை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.   அதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் , யாழ்.போதனா வைத்திய சாலை தாதி உத்தியோகத்தர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.   வேலை நிறுத்த காலத்தில் அவசர மற்றும் உயிர் காக்கும் சேவைகளில் மாத்திரமே தாதிய உத்தியோகத்தர்கள் ஈடுபடுவார்கள் என அறிவித்துள்ளனர்.   சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளுக்குத் தீர்வு வழங்குவதற்கு, அரசாங்கம் இதுவரையில் நடவடிக்கை எடுக்காமை காரணமாக Read More

Read more

எதிர்வரும் வாரம் முதல் தொழிற்சங்க நடவடிக்கைக்கு தீர்மானித்துள்ளோம்….. GMOA!!

எதிர்வரும் திங்கட்கிழமை (21) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. இன்று இடம்பெற்ற மத்தியக்குழு கூட்டத்தில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. சம்பளம் மற்றும் பணியாளர்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளாமல், தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் தன்னிச்சையாக சம்பளத்தை அதிகரிக்கும் முயற்சிகளுக்கு எதிராகவே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அதன் மத்தியகுழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் பிரசாத் (Vasan Ratnasingam Prasad) தெரிவித்தார். எவ்வாறாயினும், மத்திய குழு மேற்கொண்டுள்ள அடையாள வேலை Read More

Read more

நாளை காலை முதல் தற்காலிக நிறுத்தம்!!

சுகாதார உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைநிறுத்த போராட்டம் நாளை காலை 8மணி தொடக்கம் 14 நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளது. இன்றையதினம் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்தச் சங்கங்கள் தெரிவித்துள்ளன. 18 சுகாதார சங்கங்கள் இணைந்து ஒன்பது நாட்கள் தொடர்ந்து இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தன என்பது சுட்டிகாட்டதக்கது.

Read more

‘ஒசுசல’ விற்பனை நிலையங்கள் மூலம் மருந்துகள் இலவசமாக….. காரணம் அரச தாதியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம்!!

அரச தாதியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக ‘ஒசுசல’ விற்பனை நிலையங்கள் மூலம் மருந்துகளை இலவசமாக வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன (Channa Jayasumana) தெரிவித்துள்ளார். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கம் கடந்த 4 நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது. அரசாங்க தாதி உத்தியோகத்தர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்வதை தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நேற்று இரண்டு தடை உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. தடை Read More

Read more

மீண்டும் பணி பகிஷ்கரிப்பில் இறங்கிய அரச சுகாதார ஊழியர்கள்!!

அரச சுகாதார ஊழியர்கள் இன்று (07) காலை 7.00 மணி முதல் காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். தமது ஏழு கோரிக்கைகளுக்கு உறுதியான தீர்வுகளை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு தவறிவிட்டதாக மருத்துவ ஆய்வக அறிவியல் கல்லூரியின்  தலைவர் ரவி குமுதேஷ் (Ravi Kumudesh) தெரிவித்துள்ளார். இதன் விளைவாக, மருத்துவ ஆய்வாளர்கள், மருந்தாளுநர்கள், கதிரியக்க வல்லுநர்கள், பொது சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் குடும்ப சுகாதார அலுவலர்கள் உட்பட சுகாதார நிபுணர்களைக் கொண்ட 16 குழுக்கள் இன்று போராட்டத்தில் Read More

Read more

தொடர்ந்தும் முன்னெடுப்பதா? இல்லையா?…… இறுதி முடிவு இன்று!!

நாடுதழுவிய பணிப்புறக்கணிப்பு போராட்டத்தைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதா இல்லையா என்பது தொடர்பில் இன்று(24) தீர்மானிக்கப்படுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் ருவன் ஜயசூரிய தெரிவித்துள்ளார். தமது கோரிக்கைகளுக்கு, சுகாதார அமைச்சு கடிதம் மூலம் தீர்வு யோசனையை அனுப்பியுள்ள நிலையில், இன்று முற்பகல் 10 மணிக்கு இடம்பெறவுள்ள சங்கத்தின் மத்திய குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார். இன்றைய கூட்டத்தில் இது தொடர்பில் ஆராய்ந்து, தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read more

அனைத்து அரச மருத்துவமனைகளிலும் இன்று பணிபகிஷ்கரிப்பு!!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளிலும் ஊழியர்கள் மற்றும் அனைவரும் பணிபகிஷ்கரிப்பை இன்று வியாழக்கிழமை நடத்தவுள்ளதாக அரச தாதியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, காலை 06 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரை இந்தப் பணிபகிஷ்கரிப்பு நடைபெறவுள்ளது. அரச ஊழியர்கள் அனைவரையும் திங்கட்கிழமை முதல் வழமைபோல சேவைக்கு அரசாங்கம் அழைத்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்தப் பணிபகிஷ்கரிப்பை நடத்தவுள்ளதாக தாதியர்கள் சங்கத்தின் தலைவரான சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார். இந்தப் பணிபகிஷ்கரிப்பிற்கு 44 தொழிற்சங்கங்கள் இணையவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Read more

தாதியர் சங்கத்தினரின் 48 மணித்தியால தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பம்!!

தாதியர் தொழிற்சங்கம் இன்று (01) காலை முதல் 48 மணித்தியாலங்களுக்கு ஒன்றிணைந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இன்றும் (01) நாளையும் (02) சுகயீன விடுமுறையை அறிக்கையிடவுள்ளதாக குறித்த தாதியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

Read more

மருத்துவ அதிகாரிகளின் ஓய்வு பெறும் வயதெல்லை நீடிப்பு!!

அரச சேவையில் பணியாற்றும் அனைத்து தரத்திலும் உள்ள மருத்துவ அதிகாரிகளின் ஓய்வு பெறும் வயதெல்லை 63 ஆக நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை இதற்கு முன்னர் 61 ஆக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read more