இலங்கையின் டோக் இன குரங்குகள் சீன ஏற்றுமதிக்கு….. எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப் போவதில்லை!!
இலங்கையின் டோக் இன குரங்குகளை(Toque Macaque) சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப் போவதில்லையென உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதனை, வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் இன்று(26/06/2023) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கூறியுள்ளது. இந்த குரங்கு ஏற்றுமதி நடவடிக்ககைளுக்கு எதிரான மனுத் தாக்கல்கள் இன்றையதினம்(26/06/2023) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் வழங்கிய அறிவிப்பினை சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Read more