“மாவீரர் வாரம்” இன்று முதல் ஆரம்பம்!!

தாயகப் பகுதியில் மாவீரர் தின அனுஷ்டிப்புக்களை தடுக்கும் வகையில் காவல்துறையினர் நீதிமன்றங்கள் ஊடாக தடை உத்தரவுகளைப் பெற்றுள்ளனர். முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இந்தத் தடை உத்தரவு ஏற்கனவே பெறப்பட்டுள்ள நிலையில் இன்று மாவீரர் வாரம் ஆரம்பமாகின்றது.   சிறிலங்கா அரசாங்கத்தின் தடை உத்தரவுகளுக்கு மத்தியில் இன்றைய தினம் (21) ஆரம்பிக்கவுள்ள மாவீரர் தின நினைவேந்தல் வாரம் எதிர்வரும் 27ஆம் திகதி வரை கடைப்பிடிக்கப்படவுள்ளது.

Read more

யாழிலும் மாவீரர் நாள் விளக்கேற்றலிற்கு தடை!!

நாள் நினைவேந்தல்களுக்கு முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் நீதிமன்ற தடையுத்தரவுகளை காவல்துறையினர் பெற்றுள்ள நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்திலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் காவல் நிலையப் பொறுப்பதிகாரிகளால் இந்த தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதிக்கக் கோரி, காவல்துறையினரால் முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் காவல் நிலையப் பொறுப்பதிகாரிகள் சார்பில் இந்த மனுக்கள் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டன. கோப்பாயில் மாவீரர் துயிலும் Read More

Read more