பருத்தித்துறையில் அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் பலருக்கு தொற்று உறுதி!!

பருத்தித்துறை – மந்திகை ஆதார மருத்துவமனைக்கு நேற்று வெளிநோயாளர் பிரிவுக்கு சிகிச்சைக்கு வருகை தந்தவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் 32 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 45 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையிலேயே 32 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் மருத்துவமனையில் சிகிச்சை பெறவேண்டியவர்கள், இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்களில் அனுமதிக்கப்படவேண்டியவர்கள் மற்றும் வீடுகளில் கண்காணிக்கப்பட வேண்டியவர்கள் என பிரித்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.

Read more