மீண்டும் பணி பகிஷ்கரிப்பில் இறங்கிய அரச சுகாதார ஊழியர்கள்!!

அரச சுகாதார ஊழியர்கள் இன்று (07) காலை 7.00 மணி முதல் காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். தமது ஏழு கோரிக்கைகளுக்கு உறுதியான தீர்வுகளை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு தவறிவிட்டதாக மருத்துவ ஆய்வக அறிவியல் கல்லூரியின்  தலைவர் ரவி குமுதேஷ் (Ravi Kumudesh) தெரிவித்துள்ளார். இதன் விளைவாக, மருத்துவ ஆய்வாளர்கள், மருந்தாளுநர்கள், கதிரியக்க வல்லுநர்கள், பொது சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் குடும்ப சுகாதார அலுவலர்கள் உட்பட சுகாதார நிபுணர்களைக் கொண்ட 16 குழுக்கள் இன்று போராட்டத்தில் Read More

Read more

வைத்தியசாலைகளை மூடக்கூடிய நிலைமையும் ஏற்படும்….. GOMA கடும் எச்சரிக்கை!!

பிரதமருடனான  பேச்சுவார்த்தையிலும் பிரச்சினைகளுக்கான தீர்வு கிட்டாவிட்டால் முன்அறிவிப்பின்றி தொடர் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. இது தொடர்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் (Vasan Ratnasingam) தெரிவிக்கையில் , எமது கோரிக்கைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மதத்தலைவர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் தெளிவுபடுத்திக் கொண்டிருக்கின்றோம். கடந்த வாரங்களில் எம்மால் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க போராட்டத்தின் போது முன்வைக்கப்பட்ட பெரும்பாலான Read More

Read more

தொடர்ந்தும் முன்னெடுப்பதா? இல்லையா?…… இறுதி முடிவு இன்று!!

நாடுதழுவிய பணிப்புறக்கணிப்பு போராட்டத்தைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதா இல்லையா என்பது தொடர்பில் இன்று(24) தீர்மானிக்கப்படுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் ருவன் ஜயசூரிய தெரிவித்துள்ளார். தமது கோரிக்கைகளுக்கு, சுகாதார அமைச்சு கடிதம் மூலம் தீர்வு யோசனையை அனுப்பியுள்ள நிலையில், இன்று முற்பகல் 10 மணிக்கு இடம்பெறவுள்ள சங்கத்தின் மத்திய குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார். இன்றைய கூட்டத்தில் இது தொடர்பில் ஆராய்ந்து, தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read more

மூன்றாவது நாளாகவும் தொடரும் பணிப்பகிஷ்கரிப்பு!!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரின் பணிப்பகிஷ்கரிப்பு இன்று (23) மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது. இடமாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நேற்று முன்தினம் (21) முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எவ்வாறாயினும் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் எவ்வித இடையூறுமின்றி சேவை முன்னெடுக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Read more

அரச மருத்துவ அதிகாரிகள் பாடசாலை சிற்றுண்டிச்சாலை தொடர்பில் வெளிவந்த சுற்றறிக்கை!!

பாடசாலை சிற்றுண்டிச்சாலை எவ்வாறு அமைய வேண்டும் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நேற்று (26) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் இதனைத் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பரவலை அடுத்து சிறுவர்களிடையே தொற்றா நோய்களின் தாக்கம் தற்போது அதிகரித்து வருவதாக அறிவித்துள்ளது. எனினும், பல சிற்றுண்டிச்சாலைகள் அந்த சுற்றறிக்கைக்கு அமைய செயற்படுவதில்லையென வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார். இதன்போது , மாணவர்களின் இணை பாடவிதான Read More

Read more

தொற்றுநோயைக் கட்டுப்படுத்த தடுப்பூசி விரைவான தீர்வு அல்ல- கோட்டாபயவுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

இலங்கையில் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த தடுப்பூசி விரைவான தீர்வு அல்ல என இலங்கை வைத்திய சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் தடுப்பூசி திட்டத்தை அந்த சங்கம் பாராட்டியுள்ளது. குறிப்பிடத்தக்க அளவு மிக வேகமான தடுப்பூசி வழங்கல் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டாலும், கணிசமான அளவு நோய் எதிர்ப்பு சக்தியை எங்களால் உருவாக்க முடியாது என்பதை தாம் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தியுள்ளதாக இலங்கை வைத்திய சங்கத்தின் தலைவர் வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார் தடுப்பூசி வழங்கியதன் பின்னர் Read More

Read more