மட்டக்களப்பில் சிகிச்சை நிலையத்தில் வெடிப்பு சம்பவம்!!

மட்டக்களப்பு அரசடியில் இடம்பெற்ற எரிவாயு அடுப்பு வெடித்த சம்பவத்தால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். நேற்று மாலை 7 மணியவில் சிகிச்சை நிலையத்தை மூடிச் சென்றபின் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளதாக முதற்கட்ட விசாராணைகளில் தெரியவந்துள்ளது. இயங்குநிலையில் இல்லாத எரிவாயு அடுப்பு வெடித்ததன் காரணமாக 3 தண்ணீர் மோட்டர் இயந்திரம் மற்றும் குறித்த அறையின் கதவு உட்பட பல பொருட்கள் சேதமடைந்துள்ளன. குறித்த வெடிப்புச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு காவல்துறையினர் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more

இதுவரையில் 233 வெடிப்புச் சம்பவங்கள் பதிவு….. அமைச்சர் லசந்த அழகியவண்ண!!

இலங்கையில் கடந்த ஆறு வருடங்களில் மாத்திரம் லாப்ஸ் மற்றும் லிட்ரோ நிறுவனங்கள் ஆகியவற்றின் எரிவாயு சிலிண்டர்கள் உட்பட மொத்தம் 233 வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். 2015 ஜனவரி முதலாம் திகதி முதல் இன்று வரை இந்தச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் இன்று இந்த விடயத்தை தெரிவித்த நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் துரித நடவடிக்கை எடுத்து மக்களை அபாயத்தில் இருந்து காப்பாற்றுமாறு Read More

Read more