இன்றைய தினம் மின்சாரம் தடைப்படுமா என்பது தொடர்பில் CEB வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
மின் உற்பத்தி நிலையங்களுக்கு கனியவள கூட்டுத்தாபனம் உராய்வு எண்ணெய்யை வழங்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. கனியவள கூட்டுத்தாபனம் 5,000 மெட்ரிக் டன் உராய்வு எண்ணெய்யை இன்று வழங்கவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது. சப்புகஸ்கந்த மற்றும் துறைமுகம் என்பனவற்றில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கு இந்த உராய்வு எண்ணெய் வழங்கப்பட உள்ளதாக இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் மின்சார விநியோகத்தடை ஏற்படுமா என்பதை, மாலை வேளையில் அறியப்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார். Read More
Read more