இந்தோனேசியாவில் அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!

இந்தோனேசியாவின் பாலி மற்றும் லோம்போக் தீவுகளுக்கு வடக்கே ஆழ்கடல் பகுதியில் இன்று (29/08/2023) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், சுனாமி அபாயம் ஏதுவும் இல்லை என இந்தோனேசிய மற்றும் அமெரிக்க புவியியல் முகவர் நிலையங்கள் அறிவித்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

Read more

சீனாவில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம்….. தரைமட்டமாகிய 126 கட்டிடங்கள் – 21 பேர் படுகாயம்!!

சீனாவில் இன்று(06/08/2023) அதிகாலையில் திடீரென ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 21 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, சீனாவின் தெற்கு பகுதியில் ஷான்டொங் மாகாணம் டெசோவ் நகர் அருகே குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அண்மைக்காலமாக உலகின் பல்வேறு இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகின்ற நிலையில் நேற்று(05/08/2023) ஆப்கானிஸ்தான், இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதேபோல், நேற்று(05/08/2023) நள்ளிரவில் டெல்லியிலும் நில அதிர்வு உணரப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சீனாவில் இன்று(06/08/2023) அதிகாலையில் ரிக்டர் Read More

Read more

நியூஸிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!!

நியூஸிலாந்தில் நேற்று(31/05/2023) 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மக்கள் வசிக்காத ஆக்லாந்து தீவுகளுக்கு அருகில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த நிலநடுக்கம் 33 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக நியூஸிலாந்தின் பூகம்ப கண்காணிப்பு முகவரகம் தெரிவித்துள்ளது.

Read more

இலங்கையில் இன்றும் 3.2 ரிக்டர் அளவில் நான்காவது நிலநடுக்கம்!!

இலங்கையில் இன்றைய தினம்(22/02/2023) சிறியளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மொனராகலை மாவட்டத்தின் புத்தல பகுதியிலேயே இன்று(22/02/2023) மீண்டும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இன்று(22/02/2023) முற்பகல் 11.44 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது. புத்தல பிரதேசத்தில் 3.2 ரிக்டர் அளவில் குறித்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. எனினும், பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் கூறியுள்ளது. இதேவேளை, குறித்த பகுதியில் அண்மையில் நிலநடுக்கம் பதிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Read more

இலங்கையில் மீண்டும் இன்று 2.3 ரிச்டர் அளவு நில நடுக்கம்….. இது எதற்கான அறிகுறி!!

இலங்கையில் மீண்டும் இன்றையதினம்(11/02/2023) காலை நில நடுக்கம் உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மொனராகலை மாவட்டத்திற்குட்பட்ட வெல்லவாய, புத்தலையில் குறித்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 2.3 ரிச்டர் அளவில் இடம்பெற்றுள்ளதுடன், எந்தவிதமான உயிர்ச் சேதங்களும், பொருட்சேதங்களும் ஏற்படவில்லை எனவும், மக்கள் பயம் கொள்ளத் தேவையில்லை எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, நேற்றைய தினம்(10/02/2023) மொனராகலை மாவட்டத்தில் 3.0 ரிச்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் Read More

Read more

இந்தோனேசியாவில் 7.9 ரிக்டர்  அளவில் நிலநடுக்கம்….. இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல்!!

இந்தோனேசியாவில் 7.9 ரிக்டர்  அளவில் நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், குறித்த இந்த நிலநடுக்கத்தினால் பெரிய சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என மேலும் அறிய முடிகிரிசாது. இந்தோனேசியாவில் ஏற்பட்ட 7.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது என தேசிய சுனாமி முன் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இலங்கையின் கரையோரப் பகுதிகள் பாதுகாப்பானவை என அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து இந்த செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் தனிம்பார் Read More

Read more

சீனாவில் பாரிய நிலநடுக்கம்!!

சீனாவின் குயிங்காய் மாகாணத்தில் தெலிங்கா நகரில் பாரிய நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. இன்று ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டரில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. இது 10 கிலோ மீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக சீன நிலநடுக்க வலையமைப்பு மையம் தெரிவித்துள்ளது. ஆயினும், மக்கள் நெருக்கம் குறைவான பகுதியிலேயே நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்க மையத்தில் இருந்து 20 கிலோ மீற்றர் வரை எந்த கிராமங்களும் இல்லை என தெலிங்கா நகர அவசரகால மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது. இந்நிலநடுக்கம் தெலிங்கா நகரம் மற்றும் Read More

Read more

7.3 ரிக்டர் அளவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஜப்பானில்….. விடுக்கப்பட்ட்து சுனாமி எச்சரிக்கை!!

ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள புகுஷிமா கடலோரப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு நேரப்படி நேற்று (16/03/2022) இரவு 11.36 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.3 அலகாக பதிவாகியியுள்ளது. கடலுக்கடியில் 60 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் காரணமாக அப்பகுதியிலுள்ள கட்டிடங்கள் கடுமையாக ஆடியிருக்கின்றன. இதனையடுத்து, பல பாகங்களில் மின் துண்டிப்பு ஏற்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி Read More

Read more

பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியாவில் 6.4 ரிக்டர் அளவு பாரிய நிலநடுக்கம்!!

மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து 504 கிலோ மீற்றர் தொலைவில் பாரிய நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. இது 6.8 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள் என்பன பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் பீதியடைந்த மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர். அதேபோன்று , பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து 157 கிலோ மீட்டர் தொலைவில் லூசன் தீவுப் பகுதியிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 6.4 Read More

Read more

பாகிஸ்தான் – பலுசிஸ்தான் மாகாணத்தில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்….. 20க்கும் மேற்பட்டோர் பலி!!

பாகிஸ்தான் – பலுசிஸ்தான் மாகாணத்தில் ஹர்னாயிலிருந்து வடகிழக்கே 14 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகி உள்ளது. இதில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், இடிபாடுகளில் சிக்கி 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் இதில் பெருமளவானோர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் இந்த நில நடுக்கத்தால் உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.அத்துடன் இந்த Read More

Read more