நாட்டில் உணவு நெருக்கடியை சமாளிக்க இன்னொரு அரசு உதவி!!

இலங்கையின் உணவு நெருக்கடியை சமாளிக்க ‘ஜப்பான் அரசாங்கம்’ நிதியுதவி வழங்கியுள்ளது. இதற்காக, ஜப்பான் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கியுள்ளதாக ஜப்பான் தூதரகம் அறிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு உதவிகளை வழங்குவதற்காக இலங்கைக்கு ஜப்பானின் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, இலங்கையின் நெருக்கடியை தீர்க்கும் முகமாக ஜப்பான் அரசு 5 பில்லியன் நிதியுதவி வழங்குவதாக ஜப்பான் தூதுவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் உறுதியளித்திருந்தமை மேலும் குறிப்பிடத்தக்கது.

Read more

மருந்துகளைப் பெறுவதில் உள்ள சிக்கல்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு அவசர அறிவித்தல்!!

மருந்துகளைப் பெறுவதில் உள்ள சிக்கல்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு உதவ சுகாதார அமைச்சு அவசர தொலைபேசி இலக்கத்தை அறிவித்துள்ளது. மருந்துகளை பெற்றுக்கொள்வதில் ஏதேனும் பிரச்சினைகளை எதிர்கொள்பவர்கள் அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அமைச்சுக்கு அறிவிக்க முடியும் என சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். இதன்படி, மருந்துகளைப் பெறுவது தொடர்பான புகார்கள் மற்றும் சிக்கல்களை 1999 என்ற இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி அறிவிக்குமாறு அவர் தெரிவித்துள்ளார். டொலர் நெருக்கடி காரணமாக இலங்கை தற்போது கடுமையான மருந்துப் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளமை Read More

Read more

மீண்டும் மின்கட்டணங்கள் உயர்வு!!

அரசாங்கத்தின் கொள்கையைப் பெற்றவுடன் மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பொதுமக்களிடம் கருத்துக் கோரலை நடத்தவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. நீர் மின் பற்றாக்குறையால் அதிக எரிபொருளைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் ஒரு அலகு மின்சாரத்துக்கான செலவு அதிகரித்துள்ளது. இலங்கை மின்சார சபை ஒரு அலகு மின்சாரத்துக்கு 53 ரூபாவை செலவழித்த போதிலும் நுகர்வோர் ஒருவருக்கு 16 ரூபாவே அறவிடப்படுகின்றது. இதேவேளை, கடந்த 8 வருடங்களாக மின்சார கட்டணம் அதிகரிக்கப்படவில்லையென பொதுப் Read More

Read more

பெறுமதியான சில அரச சொத்துக்களை குத்தகைக்கு வழங்கி 8 பில்லியன் USD உடனடியாக சம்பாதிக்க அரசாங்கம் திட்டம்!!

பெறுமதியான சில அரச சொத்துக்களை குத்தகைக்கு வழங்கி 8 பில்லியன் அமெரிக்க டொலர்களை உடனடியாக சம்பாதிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம், மத்தளை சர்வதேச விமான நிலையம் மற்றும் இரத்மலானை சர்வதேச விமான நிலையம் என்பனவும் அவற்றில் அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை நீண்டகால அடிப்படையில் குத்தகைக்கு விடப்படவுள்ளன. அதனடிப்படையில், கட்டுநாயக்க விமான நிலையத்தை 2 பில்லியன் டொலர்களுக்கும், மத்தள விமான நிலையத்தை 300 மில்லியன் டொலர்களுக்கும், இரத்மலானை விமான நிலையத்தை Read More

Read more

உலகவங்கி இலங்கை நிலவரம் தொடர்பில் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை!!

தாங்க முடியாத கடன் மற்றும் கொடுப்பனவு சமநிலை சவால்களை இலங்கை எதிர்கொண்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.   நிதி மற்றும் வெளிநாட்டு ஏற்றத்தாழ்வுகள் காரணமாக இலங்கையின் பொருளாதாரக் கட்டமைப்பு மிகவும் நிச்சயமற்றதாக உள்ளதாகவும் உலக வங்கி கூறுகிறது.   உயர்மட்ட கடன் மற்றும் கடன் சேவைகளை நிவர்த்தி செய்வதற்கும், நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கும், வெளிப்புற ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கும், ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு ஏற்படும் பாதகமான விளைவுகளைத் தணிப்பதற்கும் அவசரக் கொள்கை நடவடிக்கை தேவை என்று உலக வங்கி Read More

Read more

வாடிக்கையாளர்களுக்கு லிற்றோ நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

வெளிப்புற பிரச்சினைகளே சந்தை விநியோகத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதாக லங்கா லிற்றோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. நாணயக் கடிதங்களை திறப்பது இப்போது எளிதானது. ஆனால், அந்நிய செலாவணி பற்றாக்குறையால் இன்னும் சில சவால்கள் உள்ளன என்று நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கொள்வனவு கட்டளைகள் வருவதாக உறுதியளிக்கப்பட்ட போதிலும் நாட்டின் நிலையற்ற நிலை காரணமாக அடுத்த சில மாதங்கள் எப்படி இருக்கும் என்பதை கணிப்பது கடினம் என்று தெரிவித்துள்ளார். இதேவேளை, 5 நாட்களுக்கு பொது விடுமுறைக்காக தமது விநியோகத்தை Read More

Read more

இலங்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு அமெரிக்கா ஆலோசனை!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு அறிவார்ந்தவர்கள் மூலம் அரசாங்கம் தீர்வினை வழங்க முன்வர வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.   இலங்கை வரலாற்றில் ஒவ்வொருவரினதும் குரல் தற்போது முக்கியமானதாக கருதப்படுவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தனது டுவிட்டர் தளத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.   அத்துடன், போராட்டக்காரர்கள் அமைதியாகவும், அவர்களது குரல்களை மாற்றத்திற்காகவும் ஒற்றுமைக்காகவும் உயர்த்துமாறு தூதுவர் கேட்டுக்கொண்டுள்ளார்.   இந்நிலையில், இலங்கை அரசாங்கம் பிரச்சினையை அடையாளம் கண்டு அதனை அறிவார்ந்தவர்கள் மூலம் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இலங்கைக்கான Read More

Read more

பேராதனை போதனா வைத்தியசாலையில் திட்டமிடப்பட்ட அனைத்து சத்திரசிகிச்சைகளும் இடைநிறுத்தம்!!

மருந்து தட்டுப்பாடு காரணமாக பேராதனை போதனா வைத்தியசாலையில் திட்டமிடப்பட்ட அனைத்து சத்திரசிகிச்சைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. வைத்தியசாலையில் அவசர சத்திரசிகிச்சைகள் மாத்திரமே இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி, பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களால் இலங்கை அரசாங்கத்தால் மருந்துகளை உற்பத்தி செய்ய முடியவில்லை. இதனால், கையிருப்பில் இருந்த மருந்துகள் தீர்ந்த நிலையில் மருந்து தட்டுப்பாடு ஏற்றப்பட்டுள்ளது. இதேவேளை, இந்தியாவிடம் இருந்து பெற்ற கடனுதவியின் கீழ் அரசாங்கம் மருந்துகளை இறக்குமதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more