மேலும் 5 இலட்சம் Sinopharm தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன!!
சீன அரசாங்கத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட மேலும் 5 இலட்சம் Sinopharm தடுப்பூசிகள் இன்று அதிகாலை நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன. ஶ்ரீலங்கன் விமான சேவையின் UL 869 விமானத்தினூடாக சீனாவிலிருந்து இந்த தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்போது, இலங்கைக்கான சீன தூதுவர், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, நாமல் ராஜபக்ஸ, பிரசன்ன ரணதுங்க மற்றும் D.V. சாணக்க ஆகியோர் விமான நிலையத்தில் பிரசன்னமாகியிருந்தனர். இலங்கைக்கு 2 மில்லியன் தடுப்பூசிகளை எதிர்வரும் ஒரு மாதத்திற்குள் வழங்கவுள்ளதாக சீன தூதுவர் தெரிவித்ததாக இராஜாங்க Read More
Read more