600 பில்லியன் ரூபா பெறுமதியான 350 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்ட்து!!

600 பில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் இலங்கை சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 350 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். பனாமாவில் இருந்து இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்ட கப்பலில் இருந்த பழைய இரும்புப் பொருட்கள் கொண்டுசெல்லப்பட்ட கொள்கலனில் மிக சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த கொள்கலன்கள் பனாமாவிலிருந்து துபாய் துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளதுடன், இலங்கையூடாக அதனை இந்தியாவிற்கு அனுப்ப தயாராகியிருந்த நிலையில், இலங்கை சுங்கப் பிரிவினரால் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Read more

10 மில்லியன் பெறுமதியான “குஷ் கஞ்சா” வெளிநாடுகளில் இருந்து பொதிகளினுடாக நாட்டிற்குள்!!

வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்களுக்கு என அனுப்பி வைக்கப்பட்ட பொதிகளில் பாரியளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்படி, 10 மில்லியன் பெறுமதியான குஷ் கஞ்சா சுங்கப்பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இலங்கை சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு கடமைகளின் போது, குறித்த பொதிகளில் போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் 13 பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

Read more