88 மாதிரிகளில், 82 ஒமைக்ரோன் மற்றும் 6 டெல்டா தொற்றாளர்கள் இனங்காப்பு….. அபாய வலையமாகும் இலங்கை!!

நாட்டில் 82 புதிய ஒமைக்ரோன் தொற்றாளர்ளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிறி ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர(Chandima Jeewandara) தெரிவித்துள்ளார். 88 மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டதில் 82 ஒமைக்ரோன் தொற்றாளர்களும் 6 டெல்டா வைரஸ் தொற்றாளர்களும் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு மாநகர சபை, கொழும்பு, கொஸ்பேவ, மத்துகம, ஆகிய பகுதிகளில் ஒமைக்ரோன் தொற்றாளர்கள் அதிகளவில் இனங்காப்பட்டுள்ளதாக சந்திம ஜீவந்தர சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, கொழும்பு தேசிய Read More

Read more

திருமணங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வோருக்கு தடுப்பூசி அட்டை கட்டயம்!!

கம்பகா மாவட்டத்தில் நடைபெறும் திருமணங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் போது கொரோனா தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்க  கொரோனா தடுப்புக்குழு தீர்மானம் மேற்கொண்டுள்ளது. மினுவாங்கொடை கொரோனா தடுப்புக்குழுக் கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார். முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டவர்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களாகக் கருதப்படுகிறார்கள். கொரோனா பரவுவதைத் தடுக்க அரசாங்கம் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளதாகவும், நாட்டை மீண்டும் மூடுவது சாத்தியமில்லை எனவும், சுகாதாரத் திணைக்களத்தின் பரிந்துரைகளுக்கு Read More

Read more

மீண்டும் பயணத்தடை/பொது முடக்கமா….. MOH வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வரும் நிலையில் தற்போதைய பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் மீண்டும் பொதுமுடக்கம் அல்லது பயணத்தை ஒன்றிற்கு செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சுகாதார சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தனிநபர்களிடமிருந்து நாட்டை முடக்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் அவ்வாறு முடக்குவதற்கு எவ்வித தீர்மானங்களும் எடுக்கவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Read more

பி.ஏ.1, பி.ஏ.2 மற்றும் பி.ஏ.3 திரிபுகள் தொடர்பில் விஞ்ஞானிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளில் ஒமிக்ரோன் வைரசின் புதிய மாறுபாடு வகையான பி.ஏ.2 வைரஸ் கண்டறியப்பட்ட நிலையில் அது வேகமாக பரவும் தன்மை கொண்டது என பிரான்ஸ் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். ஒமிக்ரோன் வகை கொரோனா வைரசின் துணை திரிபுகள், பி.ஏ.1, பி.ஏ.2 மற்றும் பி.ஏ.3 என உலக சுகாதார அமைப்பு வரிசைப்படுத்தியுள்ளது. இந்நிலையில், பிரிட்டனில் 426 பேருக்கு பி.ஏ.2 வகை ஒமிக்ரோன் வைரஸ் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், டென்மார்க், நோர்வே, சுவீடன் உள்ளிட்ட நாடுகளிலும் அவ்வகை மாறுபாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Read More

Read more

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பவானிக்கு ஒட்டிக்கொண்ட பீடை!!

நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம், மூன்றாவது இடத்தை பிடித்து ரசிகர்கள் கொண்டாடி வருபவர் தான் பாவனி. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்தாலும், பிக்பாஸ் அல்டிமேட் ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிப்பரப்பாகும் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததும், போட்டியாளர்கள் அனைவரும் தங்களின் அனுபவத்தை பகிர்ந்து வரும் நிலையில் பாவனி, தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்து அதிர்ச்சியளித்துள்ளார். அதில், “என்னுடைய நலம் விரும்பிகள் அனைவருக்கும்… நான் லேசான அறிகுறிகளுடன் Read More

Read more

டெல்டாவை முந்திக்கொண்டு வேகமாக பரவும் ஒமைக்ரோன்!

டெல்டாவை முந்திக்கொண்டு ஒமைக்ரோன் திரிபு வேகமாக பரவும் நிலை காணப்படுவதாக சிறி ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட ஒவ்வாமை, மூலக்கூற்று நுண்ணுயிர் பிரிவின் தலைவரான கலாநிதி சந்திம ஜீவந்தர (Chandima Jeevanthara) தெரிவித்துள்ளார். இதனால் இலங்கையின் முக்கிய வைரஸாக ஒமைக்ரோன் வைரஸை தற்போது குறிப்பிடமுடியும் எனவும் தெரிவித்துள்ளார். நாட்டில் இதுவரை 208 ஒமைக்ரோன் தொற்று நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். புதிதாக இனங்காணப்பட்டுள்ள ஒமைக்ரோன் வைரஸ் தொற்றுநோயாளர்களில் பெரும்பாலானோர் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகளுக்கு செல்வதற்காக வந்திருந்தவர்கள் Read More

Read more

அடுத்தவாரம் முதல் மாணவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி

16 தொடக்கம் 19 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான இரண்டாவது டோஸ் அடுத்த வாரம் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண (Prof. Channa Jayasumana) தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது தடுப்பூசிகள் வழங்கும் செயற்பாடு மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். அநுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். “பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் செயற்பாடு வெற்றி பெற்றுள்ளது. சில நாட்களில் மூன்று மாதங்கள் முடிந்த பிறகு 16 Read More

Read more

கொரோனா மரணங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

இலங்கையில் நேற்றைய தினம் 14 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர்களில் நான்கு பேர் ஆண்கள் எனவும் 10 பேர் பெண்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,211 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் நாட்டில் 7 கொவிட் மரணங்கள் பதிவாகி இருந்த நிலையில் நேற்றைய தினம் இது இரட்டிப்பாகி உள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 568,049 Read More

Read more

இன்று முதல் வழமைக்கு திரும்பும் கல்வி நடவடிக்கைகள்

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் வழமைக்கு திரும்புவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்தநிலையில், தற்காலிகமாக மூடப்பட்ட பாடசாலைகள், சில கட்டுப்பாடுகளுடன் மீள திறக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான கல்வி நடவடிக்கைகள் ஜனவரி மாதம் 3ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இதேவேளை பாடசாலைகளிலுள்ள சிற்றுண்டிசாலைகளை திறப்பதற்கு சுகாதார அமைச்சு இதுவரை அனுமதி வழங்கவில்லை. அதனால் பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்கள் வெளியிலிருந்து உணவை எடுத்து செல்ல வேண்டும் என Read More

Read more

இலங்கையில் மேலும் 7 கொவிட் மரணங்கள் பதிவு

இலங்கையில் மேலும் 7 கொவிட் மரணங்கள் நேற்று பதிவாகியுள்ளதாக சகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,119 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 141 பேர் குணமடைந்துள்ளதாக இன்று(09) வெளியிடப்பட்டுள்ள, நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இதுவரை நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 567,077 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.    

Read more