“டெல்டா ப்ளஸ் கொரோனா திரிபு வைரஸ்” பரவக்கூடிய நிலை இப்போது நாட்டில் ஏற்பட்டுள்ளது!!

மிக மோசமான டெல்டா ப்ளஸ் கொரோனா திரிபு வைரஸ் இலங்கையில் பரவக்கூடிய எச்சரிக்கை நிலை காணப்படுவதாக இலங்கை மருத்துவர் சங்கத்தின் தலைவர் விசேட மருத்துவ நிபுணர் பத்மா குணரத்ன ( Dr. Padma Gunarathne) தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் தொடர்பில் உலக சுகாதார அமைப்பு இதுவரை எந்த கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், அது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர், ஏனைய கொரோனா வைரஸ் திரிபுகளைப் Read More

Read more

97% அதிபர்களும், 89% ஆசிரியர்களும், 45% மாணவர்களும் வருகை…… பேராசிரியர் கபில பெரேரா!!

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் தரம் 1-5 வரை நேற்று (25) ஆரம்பிக்கப்பட்டதையடுத்து 97% அதிபர்களும் 89% ஆசிரியர்களும் கடமைக்கு சமுகமளித்திருந்ததாகவும் மாணவர்களின் வருகை 45% ஆக இருந்ததாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா (K.Kapila C.K.Perera) தெரிவித்தார். அதிபர் மற்றும் ஆசிரியர் சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு கோரி அதிபர் ஆசிரியர்கள் தொழிற்சங்க கூட்டணி தனது 106 நாள் வேலைநிறுத்தத்தை முடித்து நேற்று (25) பாடசாலைகளுக்கு சேவைகளுக்கு சமுகமளித்திருந்தனர். பாடசாலைகளுக்கு மாணவர்களின் வரவு படிப்படியாக அதிகரிக்குமென Read More

Read more

7வயது வரை உள்ள குழந்தைகளுக்கு எழுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டது போல….. வீட்டுப்பாடம் கொடுப்பதையும் ரத்துசெய்ய புதிய சட்டம் வகுக்கவுள்ள சீனா!!

சீனாவில் ஏற்கனவே 7 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு எழுத்து தேர்வு கடந்த ஆகஸ்டு மாதம் ரத்து செய்யப்பட்டிருந்ததைப் போலவே தற்போது வீட்டுப்பாடமும் ரத்து செய்யப்பட்டுள்ளது என இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனா காலத்தில் மற்ற நாடுகளை போல சீனாவிலும் பாடசாலை குழந்தைகளுக்கு இணைய வசதிகள்  மூலம் வகுப்புக்கள் நடத்தப்பட்டன. இதில் மாணவர்களுக்கு கடும் மன அழுத்தம் ஏற்பட்டு அவதிக்குள்ளானார்கள். இந்த நிலையில் பாடசாலைகள் திறக்கப்பட்டது. ஆனாலும் வீட்டுப்பாடங்கள் அதிகம் கொடுக்கப்பட்டது. இதனால் மாணவர்கள், குறிப்பாக Read More

Read more

மாணவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றப்படும்போது பெற்றோர்களின் அனுமதி கடடாயம்….. எல்.எம்.பி. தர்மசேன!!

நாடளாவிய ரீதியில் 16 முதல் 18 வயதுக்கு இடைப்பட்ட, அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றப்படும்போது, பெற்றோர்களின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் பாடசாலை செயற்பாடுகள் தொடர்பான மேலதிக செயலாளர் எல்.எம்.பி. தர்மசேன( L.M.P Tharmasena) தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர், பெற்றோர்களின் அனுமதிக்கான விண்ணப்பப்படிவம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது, அதனைப் பூர்த்தி செய்து, பெற்றோரின் கையொப்பம் பெறப்பட்டிருப்பது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட Read More

Read more

பொது போக்குவரத்து சேவையை நிறுத்துங்கள்…. வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்!!

கொவிட் -19 தொற்றை கணிசமாக கட்டுப்படுத்தும் வரை பொது போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படுவதை மேலும் ஒத்திவைக்க வேண்டும் என்று சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம்,விசேட (Dr. Hemantha Herath) தெரிவித்துள்ளார். பொது போக்குவரத்தை மீண்டும் தொடங்குவது கொவிட் தொற்று மீண்டும் தலைதூக்க வழிவகுக்கும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனவே, எதிர்காலத்தில் நாங்கள் மிகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Read more

பாடசாலை சேவை வாகன கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானம்!!

பாடசாலை சேவைக் கட்டணத்தை அதிகரிப்பதற்க  தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாடசாலை போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்கும் சங்கத்தின் தலைவர் எல்.மல்ஸ்ரீ டி சில்வா தெரிவித்துள்ளார். வாகன உதிரிபாகங்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளமையே இதற்கு காரணமெனவும் அவர் தெரிவித்துள்ளார். எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலும் தமக்கான கட்டணத்தை அதிகரிக்கவில்லையென மேற்படி சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கமைய எதிர்வரும் நாட்களில் பாடசாலைகள் மீள திறக்கப்படவுள்ள நிலையில், மாணவர்களின் போக்குவரத்து சேவைக்கான கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Read more

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் மேலும் நீடிப்பு!!

தற்போது நடைமுறையிலுள்ள  மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒக்டோபர் 21 ஆம் திகதி வரை குறித்த தடையை நீடிக்குமாறு சிறிலங்கா அரச அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ உத்தரவிட்டுள்ளார். இன்று இடம்பெற்ற கொரோனா ஒழிப்பு செயலணியின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஒக்டோபர் 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் விடுமுறை நாட்கள் இருப்பதால், அனைத்து மாகாண எல்லைகளிலும் போக்குவரத்து கண்டிப்பாக சோதனை செய்யப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அரச அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

Read more

வெளிநாடு செல்வதற்காக வெளிநாடு செல்வதற்காகவெளிவிவகார அமைச்சின் முன் அதிகாலை ஒரு மணியிலிருந்து நீண்ட வரிசையில் காத்திருக்கும் இளைஞர் யுவதிகள்!!

வெளிநாடு செல்வதற்காக தம்மை பதிவு செய்யும் நோக்குடன் நாடளாவிய ரீதியில் இருந்து பல இளைஞர் யுவதிகள் நேற்று கொழும்புக்கு படையெடுத்து இருந்தனர். இவர்கள் வெளிவிவகார அமைச்சின் முன் அதிகாலை ஒரு மணியிலிருந்து வரிசையில் நின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாடு செல்ல எதிர்பார்ப்பவர்கள் தம்மை வெளிவிவகார அமைச்சில் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளமைக்கு அமைய இவர்கள் வருகைத்தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பல காரணங்களுக்காக வெளிநாடுகளுக்கு செல்ல எதிர்பார்த்திருக்கும் இலங்கையர்கள், கொரோனா பரவல் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக தமது பயணத்தை தொடர Read More

Read more

வெள்ளிக்கிழமை(15) கொழும்பு மாவட்ட க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான Covid-19 தடுப்பூசி!!

எதிர்வரும் வெள்ளிக்கிழமை கொழும்பு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. 21 ஆம் திகதி பாடசாலைகள் தொடங்க முன்னர் 18 முதல் 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் கொடுக்க சுகாதார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சகம் ஏற்பாடுகளை செய்துள்ளது. இதன் முன்னோடித் திட்டமாக 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பு மாவட்டத்தில் தொடங்கப்பட உள்ளது. அனைத்து மாணவர்களும் தங்கள் அடையாள அட்டைகளுடன் Read More

Read more

Covid 19 தடுப்பூசி பெற்றவர்களுக்கு “டிஜிட்டல் அட்டை” தயாரிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன….. ஜயந்த டி சில்வா!!

கொவிட் தடுப்பூசி பூரணமாக ஏற்றிக்கொண்டவர்களுக்கான டிஜிட்டல் அட்டை தயாரிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன என துறைசார் இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா (Jeyantha De Silva)  தெரிவித்துள்ளார். இதற்கமைவாக, தற்போது பூரணமாக தடுப்பூசிகளை செலுத்திக்கொண்ட, வெளிநாடுகளுக்கு செல்லும் எதிர்பார்ப்பிலுள்ளவர்களுக்கு முதற்கட்டமாக  குறித்த டிஜிட்டல் அட்டைகளை விநியோகிக்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். < அதனடிப்படையில், QR குறியீடு ஊடாக தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.   மேலும் டிஜிட்டல் அட்டைகளை விநியோகித்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தற்போது Read More

Read more