இலங்கையை எச்சரிக்கிறது உலக வங்கி….. உலக வங்கியின் பொரிஸ் ஹடாட் சர்வோஸ்தெரிவிப்பு!!

பொருளாதார நெருக்கடி நிலைமையானது தொடர்ந்து உக்கிரமடைந்தால் மக்கள் அதிகளவில் நாட்டை விட்டுச் செல்வார்கள் என உலக வங்கியின் இலங்கை, மாலைதீவு மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கான பணிப்பாளர் பொரிஸ் ஹடாட் சர்வோஸ் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்(20/07/2023) கொழும்பில் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு கூறிய அவர் பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து மிகவும் கவலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “பொருளாதார சிரமங்களை எதிர்நோக்கும் குடும்பங்கள் தமது Read More

Read more

இலங்கைக்கு 700 மில்லியன் டொலர் கடனுதவி வழங்க உலக வங்கி அனுமதி!!

வரவு செலவுத் திட்டத்திற்கு தேவையான நிதியை வழங்குவதற்கு இலங்கைக்கும் உலக வங்கிக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட உள்ளது. அந்த உடன்படிக்கையின் கீழ், இலங்கைக்கு உலக வங்கியிடமிருந்து 500 மில்லியன் டொலர்கள் கிடைக்கும். உரிய நிதியைப் பெறுவதற்கு அமைச்சரவையின் அனுமதி தேவை. கடந்த மார்ச் மாதம் சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்குவதற்கு ஒப்புக் கொள்ளப்பட்ட 2.9 மில்லியன் டொலர் கடன் வசதியின் பின்னர் நாடு பெற்றுள்ள மிகப் பெரிய நிதி உதவி இதுவாகும். இலங்கைக்கு 700 மில்லியன் Read More

Read more

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாணும் திட்டத்தை முன்வைத்தால் பெருந்தொகை நிதி வழங்கப்படும்….. உலக வங்கி!!

பெருந்தொகை நிதியை இலங்கைக்கு வழங்க உலக வங்கி எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டுக்கு வந்த பின்னர் இந்த நிதியுதவியை உலக வங்கி வழங்கும் எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். பிரதமரின் செயலகத்தில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்து கருத்துரைத்த அவர், “சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளில் அடிப்படை விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளது. இலங்கைக்கு உதவ பல நாடுகள் முன்வந்துள்ளன.   இதனால், Read More

Read more

பொதுவிடுமுறையாக 11, 12 திகதிகளில் வங்கி சேவைகள் தொடர்பாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட தகவல்!!

உரிமம் பெற்ற அனைத்து வங்கிகளும் எதிர்வரும் 11 ஆம் மற்றும் 12 ஆம் திகதிகளில் திறந்திருக்கும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. குறித்த இரு தினங்களும் பொதுவிடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்த  நிலையிலும்  வங்கி சேவைகள் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more

305 ரூபாய் வரை உயர்வடைந்தது டொலரின் பெறுமதி!!

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் விற்பனை விலை இன்று ரூ. 299.00 மற்றும் அதற்கு மேல் உள்ளது.   இன்று பல வர்த்தக வங்கிகளால் ஒரு டொலரின் விற்பனை விலை குறிப்பிடப்பட்ட விதம் பின்வருமாறு: இலங்கை வங்கி – ரூ.299.00 மக்கள் வங்கி – ரூ. 298.99 கொமர்ஷல் வங்கி – ரூ. 299.00 சம்பத் வங்கி – ரூ. 299.00 செலான் வங்கி – ரூ.299.00 HNB – ரூ. 299.00 NTB – Read More

Read more

டொலரின் பெறுமதி மீண்டும் நாட்டில் அதிகரிப்பு!!

ஒரு அமெரிக்க டொலர் 275 ரூபா வரை உயர்வடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை மத்திய வங்கியின் கீழ் உரிமம் பெற்ற பல முன்னணி வங்கிகள் அமெரிக்க டொலரை மிக அதிக அளவில் விற்பனை செய்வதாக அறிவித்துள்ளன. மேலும், டொலரின் மதிப்பு நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் தொடர்ச்சியாக அந்நிய செலாவணி கையிருப்பில் இல்லாத நிலையில் நாளுக்கு நாள் டொலரின் பெறுமதி உயர்வடைந்து செல்கின்றது. இந்நிலையில், பொருட்களின் விலையும் உயர்வடைந்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more

ரஷ்யா தொடர்பாக உலகவங்கி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

ரஷ்யாவில் அனைத்து திட்டங்களும் நிறுத்தப்படுவதாக உலக வங்கி அதிரடியாக அறிவித்துள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா மீதான மேற்கத்திய நாடுகளின் பிடி இறுகி வருகிறது. பல நாடுகளும் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய விமானங்கள் தங்கள் வான்வெளியில் பறக்க தடை விதித்துள்ளன. இந்நிலையில் ரஷ்யாவிலும், அதன் நட்பு நாடான பெலாரஸ் நாட்டிலும் அனைத்து திட்டங்களையும் உலக வங்கி அதிரடியாக நிறுத்தி உள்ளது. இதுதொடர்பில் உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில், “உக்ரைன் Read More

Read more

திடீரென தீப்பற்றிய தேசிய சேமிப்பு வங்கி!!

திருகோணமலையில் அமைந்துள்ள தேசிய சேமிப்பு வங்கியில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தீ அணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று காலை7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தீ அணைப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எவ்வாறு தீ ஏற்பட்டது போன்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தேசிய சேமிப்பு வங்கிக்கு அருகாமையில் எரிபொருள் நிரப்பும் நிலையம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Read more

வங்கிக் கணக்குகள் உடனடியாக முடக்கப்படும்….. அஜித் நிவார்ட் கப்ரால்!!

புலம்பெயர்ந்த இலங்கைப் பிரஜைகள் தங்களின் உழைப்பினூடாக ஈட்டிய வருமானத்தை திருப்பி அனுப்புவதற்கு சட்ட ரீதியான வழி முறைகளை மாத்திரம் பயன்படுத்துமாறு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் (Ajith Nivard Cabraal)கேட்டுக்கொண்டுள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் இகு குறித்த தகவலை குறிப்பிட்டுள்ளார். மேலும், மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலின் Twitter பதிவை பார்வையிட இங்கே சொடுக்குக சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபடுவோரின் வங்கிக் கணக்குகள் உடனடியாக முடக்கப்படும் எனவும் அஜித் நிவார்ட் Read More

Read more