மதுபோதையில் தள்ளாடிய அம்புலன்ஸ் வண்டி….. மூன்று முச்சக்கர வண்டிகளுடன் மோதி விபத்து – மூவர் படுகாயம்!!

மதுபோதையில் நோயாளிகாவு வண்டியை(Ambulance) செலுத்தியதன் காரணமாக ஹட்டன் அளுத்கம பகுதியில் முச்சக்கரவண்டிகளுடன் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது முச்சக்கரவண்டியில் பயணித்த 3 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலைக்கு சொந்தமான குறித்த நோயாளிகாவு வண்டியானது டிக்கோயா பகுதியில் இருந்து ஹட்டன் நகரை நோக்கிச்சென்றது.   அவ்வேளை, இரண்டு முச்சக்கர வண்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகிவிட்டு, பின்னர் அதிலிருந்து சுமார் 100 மீற்றர் தூரம் வரை சென்று அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு முச்சக்கரவண்டியுடன் மோதி, Read More

Read more

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அம்பியுலன்ஸ் உட்பட ஒன்றுடன் ஒன்று மோதிய 5 வாகனங்கள்!!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் காவல்துறையின் விஷேட அதிரடிப்படையின் 1969 அம்பியுலன்ஸ் வாகனம் ஒன்று உட்பட 5 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக காவல்துறையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த விபத்தானது கெலனிகம 12.3 ஆம் கட்டைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தின் போது 5 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இவ்வாறு காயமடைந்தவர்களுள் காவல்துறையின் விஷேட அதிரடிப்படையின் கான்ஸ்டபிள் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தவர்கள் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.

Read more