“சூர்யா 41” படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியீடு….. கொண்டாடும் ரசிகர்கள்!!

எதற்கும் துணிந்தவன் படத்தின் வெற்றிக்கு பிறகு பாலா இயக்கும் புதிய படத்தில் சூர்யா நடித்து வருகிறார்.

இதற்குமுன் இந்த கூட்டணியில் பிதாமகன், நந்தா படங்கள் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

தற்போது இவர்கள் மீண்டும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா 41‘ என பெயரிடப்பட்டுள்ளது.

இதில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை ‘2டி என்டர்டைன்மெண்ட்‘(2D Entertiment) நிறுவனம் தயாரிக்கிறது.

சமீபத்தில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே,

சூர்யாவிற்கும் பாலாவிற்கும் இடையே மோதல், இதனால் படப்பிடிப்பு தளத்திலிருந்து சூர்யா விலகியதால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது போன்ற தகவல்கள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியது.

இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மீண்டும் சூர்யா 41 படப்பிடிப்புக்கு வர காத்திருக்கிறேன் எனக் குறிப்பிட்டு,

படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றையும் சூர்யா பகிர்ந்திருந்தார்.

 

இந்நிலையில்,

இப்படம் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி,

‘சூர்யா 41’ படத்தின் டைட்டில்

வணங்கான்‘ என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள சூர்யா

உங்களுடன் மீண்டும் இணைந்ததில் பெருமகிழ்ச்சி..! பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா…!” என பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பான ‘நடிகர் சூர்யா’வின் Twitter பதிவை பார்வையிட இங்கே அழுத்துக……………….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *