“இனி இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்படும்” – மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!!

தமிழகத்திலுள்ள இலங்கை தமிழர் அகதிகள் முகாம் இனி இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண்மை, கால்நடை மீன்வளம் மற்றும் பால்வளத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய தி.மு.க உறுப்பினர் பூண்டி கலைவாணன், அகதிகள் முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்கள் நலனுக்காகவும், அவர்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுத்துவதற்காகவும் முதலமைச்சர் நேற்று வெளியிட்ட அறிவுப்புக்களை பாராட்டினார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்றும் நானும் இலங்கை தமிழர்கள் அகதிகள் முகாம் என குறிப்பிட்டதாகவும், இனி இலங்கை தமிழர் அகதிகள் முகாம் என்பது இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்படும் எனவும் அதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், இலங்கைத் தமிழர்கள் அனாதைகள் அல்ல, அவர்களுக்காக நாம் இருக்கிறோம் என கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலங்கைத் தமிழர்கள் நலனில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருக்கும் எனவும் தெரிவித்தார். இதேவேளை, நேற்றைய தினம் சட்டப்பேரவையில், அகதிகள் முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கை தமிழர்களுக்கு புதிய வீடுகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து தரப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *