கோட்டாபயவை பதவி விலகவைக்க பல கட்சிகளின் தலைவர்கள் கூட்டு தீர்மானம்!!
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு பல கட்சிகளின் தலைவர்கள் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாளைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்படவுள்ளது.
இதேவேளை,
அனைத்துக் கட்சித் தலைவர்களும் கோரினால் அரச தலைவர் பதவி விலகத் தயார் என சபாநாயகர் கட்சித் தலைவர்களிடம் தெரிவித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாச நாடாளுமன்றில் இன்று தெரிவித்தார்.
எனினும்,
எதிர்க்கட்சித் தலைவரின் கருத்தை சபாநாயகர் முற்றாக மறுத்துள்ளார்.
கோட்டாபய பதவி விலக வேண்டும் எனும் தீர்மானத்திற்கு கட்சித் தலைவர்கள் தயாராக உள்ளனர் என பல தரப்பிலிருந்து தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன.
எனினும் ,
அவர் பதவி விலக போவதில்லை என்ற முடிவை கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..